"என் மனைவியை நீ வச்சிருந்தியாமே .." கல்யாண வீட்டில் மப்பு ஏறி நேர்ந்த விபரீதம் .
கல்யாண வீட்டில் மது அருந்திவிட்டு, மனைவியை உறவினரோடு இணைத்து பேசிய கணவரை குத்தி கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தமிழகத்தின் சென்னை புளியந்தோப்பு அம்பேத்கர் நகர் பகுதியைச் சேர்ந்த 40 வயதான ராஜேந்திர பாபுவுக்கு திருமணம் ஆகி மெர்சி என்ற மனைவியும் 4 பெண் குழந்தைகளும் உள்ளனர். மெர்சியின் தம்பி சீனிவாசலுவின் மகளுக்கு திருமணம் நடப்பதால் ,அதற்கு நலங்கு வைக்கும் நிகழ்ச்சி நடந்தது . அப்போது மெர்சியின் உறவினர் சதீஷ் என்பவரும் நிகழ்ச்சிக்கு வந்துள்ளார். அப்போது நடந்த மது விருந்தில் மதுபோதையிலிருந்த ராஜேந்திர பாபு , சதீஷிடம் தகராறில் ஈடுபட்டுள்ளார்.
அப்போது மெர்சிக்கும் சதீஷிக்கும் இடையே கள்ளத்தொடர்பு இருப்பதாக கூறி ராஜேந்திர பாபு சண்டையிட்டுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த சதீஷ், ராஜேந்திர பாபுவை தள்ளி விட்டு கழுத்தில் கத்தியால் குத்தியும் உள்ளார். இதனால் ரத்த வெள்ளத்தில் ராஜேந்திரபாபு இறந்து போனார்
இதுகுறித்து தகவல் அறிந்து வந்த போலீசார் விசாரணை மேற்கொண்டு , வியாசர்பாடியில் பதுங்கியிருந்த சதீஷை கைது செய்தனர். அவரிடம் நடத்திய விசாரணையில், தன்னையும் அவரது மனைவியையும் சேர்த்து வைத்து பேசியதால் ஆத்திரத்தில் கொலை செய்து விட்டதாக கூறியுள்ளார்.இது தொடர்பாக வழக்குபதிவு செய்த போலீசார், நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி அவரை சிறையில் அடைத்தனர்.