"என்னை வச்சிக்கிட்டது போதும் ,கட்டிக்க" -கல்யாணத்திற்கு டார்ச்சர் கொடுத்த கள்ள காதலியின் கதி

 
marriage

கள்ள காதலி திருமணம் செய்ய வற்புறுத்தியதால், அவரை  கழுத்தை நெரித்து கொலை செய்த போலீஸ்காரர் சரண் அடைந்தார். 

murder
மதுரை சதாசிவம் நகரைச் சேர்ந்த, பொன்பாண்டியின் மனைவி சரண்யாவுக்கு  இரு பெண் குழந்தைகள் உள்ள நிலையில், சரண்யாவின் கணவர் 4 ஆண்டுகளுக்கு முன் விபத்தில் இறந்தார். அதன் பின்னர் அவர்  போடி மரக்காமலை வனப்பகுதியில் கண்காணிப்பாளராக பணியில் சேர்ந்தார்  அப்போது மதுரை அனுப்பானடியைச் சேர்ந்த திருமுருகன்  என்பவரும் அவருடன் காவல்துறையில் பணி புரிந்தார் . பின்னர் இருவருக்கும் தொடர்பு ஏற்பட்டு,இருவரும் திருமணம் செய்யாமலே குடும்பம் நடத்தியுள்ளனர்.அதன் பின்னர் அந்த திருமுருகனுக்கு வேறொரு பெண்ணுடன் திருமணமாகி குழந்தைகளும் பிறந்தது .ஆனால் கல்யாணமானாலும் அந்த சரண்யாவுடன் கள்ள காதலை அவர் தொடர்ந்தார் .இதனால் அவரின் மனைவி அவரை விட்டு பிரிந்து சென்று விட்டார் .
அதன் பிறகு அவர் சரண்யா வீட்டுக்கு போனதும் ,அவர் தன்னை கல்யாணம் செய்து கொள்ளுமாறு வற்புறுத்தினார்  .இதனால் அந்த திருமுருகன் கோபமடைந்து அந்த சரண்யாவை கொலை செய்து விட்டு அங்குள்ள பொலிசில்  சரணடைந்தார் .
இதையடுத்து போடி நகர் போலீசார் சரண்யா வீட்டுக்குச் சென்று . அங்கு ரத்த வெள்ளத்தில் இறந்து கிடந்த சரண்யாவின் உடலை மீட்டு, பிரேத பரிசோதனைக்காக தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.