"அண்ணியை ரெண்டாவது கல்யாணம் பண்ணி ..."ஒரு கொழுந்தன் செஞ்ச வேலையை பாருங்க.

 
marriage

பணத் தகராறில்  மனைவியை சுட்டுக் கொன்ற கணவர் மற்றும் அவருக்கு உடந்தையாக இருந்த தந்தையை போலீசார் கைது செய்தனர்.

உத்தரபிரதேச மாநிலம் முசாபர்நகரில் உள்ள நாக்வா கிராமத்தை சேர்ந்த அல்ஹா என்ற இளம் பெண்ணொருவர் தனது கணவர் ப்ரோமோதுடன் வாழந்து வந்தார் .இந்நிலையில் அந்த கணவரை ஒரு சமூக விரோத கும்பல் சில ஆண்டுகளுக்கு முன்பு வெட்டி கொலை செய்து விட்டது .அதன் பிறகு  தனியாக இருந்த அந்த பெண், அந்த இறந்த கணவரின் தம்பியை ரெண்டாவது கல்யாணம் செய்து கொண்டார் .அந்த பெண் அவரின் மாமனாருடன் கூட்டு குடும்பமாக வாழ்ந்து வந்தார் .இந்நிலையில்  அந்த பெண்ணிடம் கொஞ்சம் பணம் இருந்துள்ளது .
அதை அந்த பெண்ணின் கணவர் மனோஜ் கேட்டு அடிக்கடி தகராறு செய்து வந்தார் .ஆனால் அந்த பெண் தன்னுடைய சேமிப்பில் இருந்த பனத்தை கொடுக்க முடியாது என்று தனது இரண்டாவது கணவரிடம் கூறியுள்ளார் .ஆனால் அந்த கணவரும் அவரின் தந்தையும் அந்த பணத்தை கேட்டு தொல்லை கொடுத்தனர் ,அதனால் அந்த பெண்ணனை சில நாட்களுக்கு முன்பு வீட்டிலிருந்த ஒரு துப்பாக்கியை எடுத்து மிரட்டி பணம் கேட்டனர் ,அப்போதும் அந்த பெண் பணத்தை தர மறுத்ததால் அந்த துப்பாக்கியால் அந்த பெண்ணை சுட்டு கொன்றனர் .இதன்பிறகு போலீசார் அந்த மனோஜையும் அவரின் தந்தையையும் கொலை வழக்கில் கைது செய்தனர் .