"கர்ப்பமானது தெரியாமல் கல்விக்கூடத்திற்கு போன மாணவி.. "பள்ளியில் விட சென்றவரால் வந்த வினை

 
rape

ஒரு மாணவியை பள்ளியில் விட சென்றவர் அவரை பலாத்காரம் செய்ததால் போலீஸ் அவரை தேடுகிறது 

rape

தமிழகத்தின் திருவள்ளூர் மாவட்டம் காக்களூர் ஆஞ்சநேயபுரம் பகுதியை சேர்ந்த 15 வயது பெண்ணொருவர் வில்லிவாக்கத்தில் உள்ள அரசு பள்ளியில் 10ம் வகுப்பு படிக்கிறாள். அந்த மாணவி தினமும் ஸ்கூலுக்கு தனியாக போவதற்கு சிரமமாக இருந்ததால் , அவரது  பெற்றோர் அவர்களின் உறவினர் சுரேஷ் என்பவரை  நாள்தோறும் பள்ளிக்கு இருசக்கர வாகனத்தில் அழைத்துக் கொண்டு விட ஏற்பாடு செய்திருந்தனர்  .
பின்னர் அவர் தினமும் அவரை ஸ்கூலில் விடுவதும்  அழைத்து வருவதுமாக இருந்துள்ளார். அப்போது அவர்களுக்குள் பழக்கம் ஏற்பட்டதால் அந்த சுரேஷ் அந்த மாணவியிடம் உடலுறவு கொண்டுள்ளார் .இதன் காரணமாக அந்த மாணவி கர்ப்பமானார் .ஆனால் அது தெரியாமல் அந்த மாணவி தினமும் பள்ளிக்கூடத்திற்கு சென்று வந்துள்ளார் 
இந்நிலையில், மாணவிக்கு திடீரென உடல் நலக்குறைவு ஏற்பட்டது. இதையடுத்து, பெற்றோர் மருத்துவமனைக்கு சென்று பரிசோதனை செய்துள்ளனர். அதில் மாணவி கர்ப்பமாக இருப்பது தெரியவந்தது. இதனால் அதிர்ச்சியடைந்த அவர்கள் இதுகுறித்து சிறுமியிடம் விசாரித்தபோது அந்த உறவினர் சுரேஷ்தான் இதற்கு காரணம் என்றார் .
இதுகுறித்து சிறுமியின் தாய் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதன்பேரில் அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து சுரேஷைதேடுகின்றனர்.