"நைட்ல என்னையும் ,பகலில் என் மகளையுமாடா ..."கதறிய பெண் -ஒரு வாலிபரால் நேர்ந்த விபரீதம்

 
murder


தாயோடு கள்ள தொடர்பு கொண்ட வாலிபர் அவரின் மகளையும் பலாத்காரம் செய்து கொன்றதால் கைது செய்யப்பட்டார் 

Minor girl raped, murdered by mother's lover [Representative image]
தமிழகத்தின் கோயம்புத்தூரில் சரவணம்பட்டி அருகே  மனைவி மற்றும் இரண்டு குழந்தைகளுடன்  முத்துக்குமார் என்ற 44 வயது நபர் வசித்து வந்தார் .இந்த நபருக்கும் அதே பகுதியில் , கணவரை பிரிந்து 14 வயதான மகளுடன் வாழும் 40வயதான ஒரு பெண்ணுக்கும் கள்ள தொடர்பு இருந்து வந்துள்ளது .இந்நிலையில் அந்த முத்துக்குமாரிடம்  அந்த பெண் புதிய ஆபரணங்கள் வாங்குவதற்காக 2.5 சவரன் எடையுள்ள தங்க நகைகள் மற்றும் ரூ.50,000 பணத்தை அவரிடம் ஒப்படைத்துள்ளார்.ஆனால் அந்த முத்துக்குமார் அந்த நகை பணத்தையெல்லாம் செலவு செய்து விட்டார் .இதற்கிடையே அந்த பெண் அவரிடம் மீண்டும் நகைகளை கொடுக்குமாறு கேட்டதால்,அந்த முத்துக்குமார் அவரின் 14 வயதான மகளிடம் கொடுப்பதாக கூறி வீட்டுக்கு  வர சொன்னார் .அவரின் பேச்சை நம்பி வந்த அந்த பெண்ணை அவர் அப்போது பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்து விட்டார் .பிறகு அவரின் உடலை  ஒரு பிளாஸ்டிக் பையில் வைத்து ஒரு புதரில் வீசி விட்டார் .
இந்நிலையில் மகளை காணாத அந்த தாய் போலீசில் புகார் கொடுத்ததும் ,போலீசார் வழக்கு பதிந்து தேடிய போது அந்த பெண்ணின் பிணத்தை கண்டு பிடித்தனர் .பிறகு நடத்திய விசாரணையில் முத்துக்குமார் அந்த பெண்ணை கொலை செய்ததை கண்டு பிடித்து அவரை  கைது செய்தனர்