"கஞ்சா அடிச்சிருக்கேன் ,உடலுறவு வச்சிக்கலாமா.."17 வயது பெண்ணை நள்ளிரவில் சீண்டிய வாலிபர்

 
drug heroin

கஞ்சா அடித்து விட்டு பதினேழு வயதான பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்த வாலிபரை போலீசார் கைது செய்தனர்.

rape

புதுச்சேரி மாநிலம் திருக்கனுார் காந்தி நகரை சேர்ந்தவர் சீனிவாசன் மகன் 21 வயதான தசரதன் என்ற வாலிபர்  கஞ்சா அடிக்கும் பழக்கத்திற்கு அடிமையானவர் . இவர் மீது தமிழக பகுதியில் கஞ்சா விற்பனை செய்ததாக ஏற்கனவே ஒரு வழக்கு நிலுவையில் உள்ளது.அந்த தசரதனுக்கு அதே பகுதியில் வசிக்கும் 17 வயதான பெண் மீது ஆசை வந்துள்ளது .அதனால் அந்த பெண்ணை அடைய அடிக்கடி பாலியல் தொல்லை கொடுப்பதும் ,வெளியே வரும் போது கிண்டல் செய்வதுமாக இருந்துள்ளார் 
இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு தசரதன் கஞ்சா அடித்து விட்டு , 17 வயது சிறுமியின் வீட்டிற்குள் புகுந்து பாலியல் தொல்லை கொடுத்துள்ளார் .அப்போது அந்த பெண் அவரின் தொல்லை பொறுக்க முடியாமல் அலறினார் .அதனால் வீட்டிலிருந்தவர்கள் ஓடி வந்து ,அந்த வாலிபரை பிடித்து   போலீசில் புகார் அளித்தனர் .அந்த புகாரின் பேரில் பேரில் தசரதன் மீது போக்சோ சட்டத்தின் கீழ் போலீசார் வழக்குப் பதிந்து, கைது செய்தனர். அவரை கோர்ட்டில் ஆஜர்படுத்தி, காலாப்பட்டு மத்திய சிறையில் அடைத்தனர்