"காதல் மனைவியை கண்டவனோட போக சொல்லி ..."-"கால் பாய்" கணவனுக்கு நேர்ந்த கதி
பாலியல் தொழிலில் ஈடுபட வற்புறுத்தி தாக்கிய காதல் கணவனை போலீசில் ஒப்படைத்த மனைவி
தமிழகத்தின் கள்ளக்குறிச்சி மாவட்டம், திருக்கோவிலூர் தாலுகா, சந்தப்பேட்டையை சேர்ந்தவர் 23 வயதான சொர்ண பிரியா,என்ற பெண் தஞ்சாவூரில் உள்ள காந்திபுரத்தை சேர்ந்த 30 வயதான அருண் ஜோஷி என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார் . இதை அடுத்து அவர்கள் சென்னை நீலாங்கரையில் உள்ள அருண் ஜோஷி வீட்டில் வசித்து வந்துள்ளனர். இந்தநிலையில், இன்ஸ்டாகிராம் மூலமாக அருண் ஜோஷிக்கு பல பெண்களுடன் பழக்கம் ஏற்பட்டது. நாளடைவில் அப்பழக்கம் கள்ள தொடர்பாக மாறியது.
இதனால் அவர் பல பெண்களுடன் உல்லாசமாக இருக்க கால் பாயாக செயற்பட்டு வந்தார் .அதன் பிறகு அவர் தன்னுடைய புது மனைவியையும் பல ஆண்களை வீட்டுக்கு கூட்டி வந்து அவர்களுடன் உல்லாசமாக இருக்க சொல்லிவிட்டு டார்ச்சர் செய்தார் .ஆனால் அதற்கு மறுத்த மனைவியை அடித்து கொடுமை செய்தார் .அதனால் அந்த பெண் அந்த கணவன் மீது அங்குள்ள போலீசில் புகார் தந்தார் .போலிசார் வழக்கு பதிந்து அந்த கணவனை கைது செய்தனர்