"டேய் கைய வச்சுக்கிட்டு கம்முனு வரமாட்டே..' -அலறிய பெண் டாக்டர்-இரவில் ரயிலில் ஒரு வாலிபரின் லீலை
ரயிலில் வந்த ஒரு பெண் டாக்டரிடம், பக்கத்து சீட்டில் அமர்ந்திருந்த ஒரு வாலிபர் சில்மிஷத்தில் ஈடுபட்டதால் அவரை போலீசார் கைது செய்தனர்.
தமிழகத்தின் சென்னையில் உள்ள ஒரு பிரபலமான தனியார் மருத்துவமனையில் டாக்டராக 43 வயதான சுமிதா என்பவர் பணியாற்றி வருகிறார் .கேரள மாநிலத்தை சேர்ந்த அவர் , தன் குடும்பத்தினருடன் சென்னையில் இருந்து கேரள மாநிலம், கண்ணனுாருக்கு, மங்களூர் எக்ஸ்பிரஸ் ரயிலில் பயணித்தார்.
அந்த டாக்டரின் அருகே ஒரு வாலிபர் அமர்ந்து பயணம் செய்தார் .அந்த ரயில் சேலம் - ஈரோடு இடையே, சென்று கொண்டிருந்த போது ,அந்த டாக்டர் சுமிதா இருக்கைக்கு அருகே அமர்ந்து பயணித்த அந்த வாலிபர் , அவர் மீது கை வைத்து சில்மிஷத்தில் ஈடுபட்டுள்ளார். இதனால் அந்த சுமிதா அந்த நபரிடம் சத்தம் போட்டு கையை எடுக்குமாறு எச்சரித்தார் .அதன் பின்னர் அவர் ஈரோடு ஸ்டேஷனை அடைந்தபோது, ரயில்வே போலீசில் சுமிதா புகார் அளித்தார்.அப்போது ரயில்வே போலீசார் வழக்கு பதிந்து அந்த வாலிபரை பிடித்து விசாரித்தனர் .அப்போது அவர், கேரள மாநிலம் கோழிக்கோடு மாவட்டம் காலதிங்கள் பாரப்பை பகுதியை சேர்ந்த 39 வயதான ரபிக் என்பதும், அவர் கோழிக்கோட்டில் வண்ண விளக்கு கடை உரிமையாளர் என்பதும் தெரியவந்தது. இதையடுத்து ரபிக் மீது ஈரோடு ரயில்வே போலீசார் 2 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிந்து, கைது செய்து, நீதிமன்ற உத்தரவுப்படி சிறையில் அடைத்தனர்.