"அந்தரங்கத்தை அம்பலப்படுத்தி என் சம்பளத்தையெல்லாம்.."ஒரு டீச்சருக்கு நேர்ந்த கதி .
ஒரு கணவரை பிரிந்த பெண்ணை கெடுத்து படமெடுத்து பணம் பறித்த நபரை போலீஸ் கைது செய்தது
மகாராஷ்டிரா தலைநகர் மும்பையில் உள்ள ஆரே காலனியில் வசிக்கும் 25வயதான பெண்ணொருவர் தனது கணவரோடு வசித்து வந்தார் .இந்நிலையில் டீச்சராக பணியாற்றும் அவர் கடந்த 2016ம் ஆண்டு தன்னுடைய கணவரை பிரிந்து இருந்தார் .அந்த நேரத்தில் அவர் பீகார் தலைநகர் பாட்னாவில் 25 வயதான கிருஷ்ணகாந்த் அகோரி என்பவரிடம் ஆளுமை மேம்பாட்டு வகுப்பில் பங்கேற்க சென்றார் .அப்போது அவர் அந்த அகோரியிடம் காதல் வயப்பட்டார் .இதனால் இருவரும் அடிக்கடி உல்லாசமாக இருந்தனர் .அப்போது அந்த அகோரி அந்த பெண்ணுடன் உல்லாசமாக இருந்ததை ரகசியமாக வீடியோ எடுத்து வைத்திருந்தார் .
அதன் பிறகு அந்த பெண் மீண்டும் தனது கணவருடன் சேர்ந்து விட்டார் .இதை கேள்விப்பட்ட அந்த அகோரி அந்த பெண்ணிடம் சென்று அந்த பெண்ணுடன் தான் இருக்கும் அந்தரங்க வீடியோவை காண்பித்து ,அதை சமூக ஊடகத்தில் வெளியிடாமலிருக்க லட்சக்கணக்கில் பணம் கேட்டு மிரட்டினார் .இதனால் பயந்து போன அந்த பெண் அவர் கேட்க்கும்போதெல்லாம் பணம் கொடுத்து கொண்டேயிருடந்தார் .ஆக மொத்தம் அந்த பெண் அவருக்கு நாலு லட்சம் ரூபாய் பணம் கொடுத்தார் .ஆனால் அந்த நபர் மீண்டும் பணம் கேட்டு அந்த வீடியோவை காமித்து மிரட்டியதால் அவர் போலிஸுக்கு போனார் .போலிசார் வழக்கு பதிந்து அந்த அகோரியை கைது செய்தனர் .