"ஆசை தீர்ந்ததும் அம்போன்னு விட்டுட்டியே" -ஒரு மைனர் பெண் ஏமாந்த கண்ணீர் கதை
ஓர் மைனர் பெண்ணை ஏமாற்றி திருமணம் செய்து குழந்தையையும் கொடுத்து விட்டு ஓடிப்போன வாலிபரை போலீசார் தேடி வருகின்றனர்
தமிழகத்தின் மதுரையில் ஒரு 16 வயதான பெண்ணை 25 வயதான வாலிபர் பல நாட்களாக காதலித்து வந்தார்.இதன் பிறகு அந்த காதலுக்கு இருவர் வீட்டிலும் எதிர்ப்பு நிலவியதால் அவர்கள் இருவரும் ரகசியமாக திருமணம் செய்து கொண்டு வாழ்ந்து வந்தனர் .
அதன் பிறகு அந்த பெண் கற்பமானதும் அந்த பெண்ணை அவரின் பெற்றோர் ஏற்றுக்கொண்டு அவரை கவனித்து வந்தனர் .பின்னர் அந்த பெண் சமீபத்தில் ஒரு குழந்தையை பெற்றெடுத்தார் .அந்த பெண் குழந்தை பெற்றதும் அந்த நபர் அந்த பெண்ணை கண்டுகொள்ளாமல், அவரின் வீட்டு பக்கம் வராமலும் இருந்தார் .இது பற்றி அந்த பெண் அவரை சந்தித்து கேட்டதற்கு, அவரை அடித்து கொடுமை செய்தார் .இதனால் பாதிக்கப்பட்ட அந்த பெண் இப்போது கையில் குழந்தையுடன் அனாதையாக நிற்கிறார் .இதனால் அந்த பெண் சமீபத்தில் அங்குள்ள போலீஸ் ஸ்டேஷனில் சென்று அந்த தன்னை ஏமாற்றிய வாலிபர் மீது புகார் தந்தார் .போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர் .