"என்னையும் கெடுத்துட்டு ,வீட்டையும் எடுத்துக்கிட்டு.." -ஒரு வாலிபரின் வலையில் வீழ்ந்த பெண்கள்
ஒரு பெண்ணை திருமணம் செய்வதாக கூறி அவரை பலாத்காரம் செய்து,அவரின் வீட்டையும் ஏமாற்றி எழுதி வாங்கிய நபரை போலீஸ் விசாரித்து வருகிறது.
தமிழகத்தின் சென்னை அசோக் நகரில் வசிக்கும் காஞ்சனா என்ற பெண் அசோக் நகரில் சொந்தமாக வீடு வைத்துள்ளார் .. இவரின் வீட்டின் கீழ் தளத்தில் ஆனந்தராஜ் என்பவர் வாடகைக்கு அலுவலகம் நடத்தி வந்தார் .அப்போது அந்த ஆனந்தராஜ், அந்த பெண்ணை காதலிப்பதாக கூறி பலாத்காரம் செய்துள்ளார் . அதுமட்டுமல்லாமல் அந்த பெண்ணிடம் தான் சொந்தமாக பிசினஸ் செய்ய வேண்டும் என்று கூறி அவரின் வீட்டை அவரின் பெயருக்கு ஏமாற்றி வாங்கியுள்ளார் .அதன் பிறகு அந்த நபர் அந்த பெண்ணிடமிருந்து தொடர்பை துண்டித்து கொண்டார் .இதனால் பாதிக்கப்பட்ட அந்த பெண் அவர் மீது போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் தந்தார் .
மேலும் பாக்கியலட்சுமி என்ற பெண்ணையும் ஆனந்தராஜ் காதலிப்பதாக கூறி பலாத்காரம் செய்து விட்டு , திருமணம் செய்ய மறுத்து அவரிடமிருந்து பணத்தை ஏமாற்றி விட்டு தலைமறைவாகி விட்டதாக போலீசில் புகார் வந்துள்ளது
அது மட்டுமல்லாமல் ஆனந்தராஜ், வளசரவாக்கத்தில் ஒரு அழகு நிலையம் நடத்தும்போது அங்கு மேனேஜராக வேலை பார்த்த ஒரு பெண்ணிடமிருந்து பணத்தை ஏமாற்றி விட்டு அவரையும் பலாத்காரம் செய்ய முயன்றதாக போலீசில் புகார் வந்துள்ளது .இந்த அத்தனை புகாரையும் போலீசார் விசாரித்து வருகின்றனர் .