"சன்னி லியோனுக்கே தண்ணி காமிக்கிறியா?" -ஒரு வாலிபர் செஞ்ச வேலையால் வருத்தத்திலிருக்கும் சன்னி .

 
suni

இந்திய-கனடிய பெற்றோருக்குப் பிறந்த நடிகை  சன்னி லியோன் பிக் பாஸ் 5 சீசனில் பங்கேற்க இந்தயா வந்தவர். இந்திய அளவில்  கூகுள் தேடுதலில் அதிகமாக தேடப்படும் நபராக சன்னி லியோன் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

சன்னி லியோன்
கனடாவை சேர்ந்த இந்திய வம்சாவளி நடிகை சன்னி லியோன். தற்போது மும்பையில் தங்கியிருந்து பாலிவுட் படங்களில் நடித்து வருகிறார். தென்னிந்திய படங்களில் ஒரு பாடலுக்கு ஆடியிருக்கிறார். தற்போது ஜீரோ என்ற தமிழ்ப் படத்தில் நடித்து வருகிறார். முன்னாள் ஆபாசப்பட நடிகையும் தற்போதைய பாலிவுட் பட நாயகியுமான சன்னி லியோனின் வாழ்க்கை வரலாறு திரைப்படமாக கூட  எடுக்கப்பட உள்ளது.

 இந்நிலையில் அவரது வங்கிக் கணக்கில் இருந்து யாரோ ஒரு மர்ம  ஆசாமி ஒருவர், 2 ஆயிரம் ரூபாய் திருடி இருக்கிறார். இதுகுறித்து சன்னி லியோன் தனது டிவிட்டரில் மிகவும் வருத்தத்துடன்  கூறியிருப்பதாவது:‘சில முட்டாள்கள் எனது பான் கார்டு எண்ணை பயன்படுத்தி வங்கிக் கணக்கில் இருந்து 2 ஆயிரம் ரூபாயை திருடியுள்ளனர். எனக்கு பணம் அளித்த சம்பந்தப்பட்ட நிறுவனத்திடம் புகார் அளித்தும் எனக்கு உதவவில்லை. இது ஏன் என்று எனக்கு புரியவில்லை’ என்று குறிப்பிட்டுள்ளார். இதை தொடர்ந்து சம்பந்தப்பட்ட நிறுவனம், 2 ஆயிரம் ரூபாயை திருடியவரை வலைவீசி தேடி வருகிறது.இப்படி ரசிகர்களின் கனவுக்கன்னியின் அக்கௌண்டில் பணம் போனது ரசிகர்களுக்கு  மன வேதனையை தந்துள்ளது .