"என்னை வேலையை விட்டு நீக்கிய பெண்ணை... "ஒரு வாலிபரின் வெறித்தனத்தால் வந்த விபரீதம்

 
fire

தன்னை வேலையை விட்டு நீக்கியதால் ஆத்திரப்பட்ட நபர், முதலாளி  பெண்ணை உயிருடன் கொளுத்திய போது அந்த  தீயில் சிக்கி  பலியானார் 

பணிநீக்கம்:  ஆத்திரத்தில் பெண்ணை உயிருடன் கொளுத்திய நபர் தீயில் எரிந்து பலி
மராட்டிய மாநிலம்  புனே நகரில் வடகான்சேரி பகுதியில் டெய்லர் கடை ஒன்றில் 35 வயது நபர் ஒருவர் வேலை செய்து வந்துள்ளார்.  இந்த நிலையில், அந்த கடையின் உரிமையாளரான பெண், அவரை சில பிரச்சினைகள் காரணமாக வேலையில் இருந்து நீக்கி விட்டார்.
இதனால், அந்த நபர் அந்த  பெண் முதலாளி மீது ஆத்திரத்தில் இருந்தார் .இதனால் அந்த  நபர் நேற்றிரவு கடைக்கு வந்து வாக்குவாதத்தில் அந்த பெண்ணுடன்  ஈடுபட்டு உள்ளார்.  பின்னர் திடீரென அந்த பெண் மீது தான் கொண்டு வந்த கெரோசினை ஊற்றி தீ வைத்து கொளுத்தியுள்ளார்.இந்த தீ மளமளவென எரிந்ததும்  ,அந்த தீயில் சிக்கி அந்த பெண்ணும் ,அந்த நபரும் தவித்தனர் .அப்போது அவர்களை காப்பாற்ற அருகேயுள்ள கடையிலிருந்து ஒருவர் ஓடிவந்தார் .அவரும் அந்த தீயில் சிக்கி தவித்ததும் ,தீ யணைப்பு படையினர் ஓடி வந்து அந்த மூவரையும் மீட்டு அருகிலுள்ள ஹாஸ்ப்பிட்டலில் சிகிச்சைக்கு சேர்த்தனர் ,அங்கு சிகிச்ச்சை  பலனின்றி அந்த தீ வைத்த நபர் பலியானார் .மற்றவர்கள் அந்த ஹாஸ்ப்பிடளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்