"என் கணவருக்கு தெரியாம கடைசியா ஒரு தடவை .." -நம்பி சென்ற காதலனுக்கு நேர்ந்த கதி.
கள்ளத்தொடர்பு விவகாரத்தில் ஒரு வாலிபர் கொலை செய்யப்பட்டது தொடர்பாக கணவன்-மனைவியை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்
கர்நாடக மாநிலம் ஹாசன் மாவட்டம் அரக்கல்கோடு தாலுகா ஒசகோட்டை பகுதியில் வசிக்கும் திலீப் என்பவரும் சுஸ்மிதா என்ற பெண்ணும் கணவன் மனைவியாக சந்தோஷமாக வாழ்ந்து வந்தனர் ,இந்நிலையில் அந்த சுஸ்மிதாவுக்கு அதே பகுதியில் வசிக்கும் ஹரீஷ் என்ற வாலிபருடன் கள்ள காதல் ஏற்பட்டது .அதனால் அந்த பெண் அவரின் கணவருக்கு தெரியாமல் அந்த ஹரீஸுடன் அடிக்கடி உல்லாசமாக இருந்து வந்துள்ளார் .இந்நிலையில் அந்த கணவருக்கு அந்த சுஸ்மிதாவின் கள்ள உறவு பற்றி தெரிய வந்துள்ளது .அதனால் அவர் மனைவியை கண்டித்ததும், அவர் அந்த ஹரீஸுடன் இருக்கும் கள்ள உறவை துண்டித்து விட்டார் .ஆனால் அந்த ஹரீஷ் அந்த சுஸ்மிதாவை மறக்க முடியாமல் மீண்டும் மீண்டும் அவருடன் உல்லாசத்திற்கு வருமாறு கட்டாயப்படுத்தியுள்ளார் .இது பற்றி அந்த பெண் தன் கணவரிடம் கூறினார் .உடனே அவர்கள் இருவரும் அந்த ஹரீஸை கொல்ல முடிவு செய்தனர் .
அவர்களின் திட்டப்படி அந்த சுஸ்மிதா அவரின் காதலனை கூட்டிக்கொண்டு அங்குள்ள ஒரு விடுதியில் தங்கினார் .அப்போது அங்கே ஏற்கனவே இருந்த அந்த பென்னின் கணவர் திலீப்புடன் சுஸ்மிதாவும், சேர்ந்து ஹரீசை கத்தியால் குத்தினர். இதில் ஹரீஷ், ரத்த வெள்ளத்தில் பரிதாபமாக உயிரிழந்தார். அந்த ஹரீஸை கொலை செய்து விட்டு இருவரும்தப்பி ஓடி விட்டனர் .பிறகு விடுதியினர் அளித்த புகாரின் பேரில் போலீசார் விசாரணை நடத்தி அந்த திலீப்பையும் அவரின் மனைவியையும் வலைவீசி தேடி வருகிறார்கள்.