"கட்டிலுக்காகத்தான் என்னை காதலிச்சியா?" -தாலி கேட்ட காதலியை ,நண்பருடன் ஒரு காதலன் செஞ்ச கொடுமை .

 
love


ஒரு காதலியை கொலை செய்து ,முகத்தை சிதைத்து ,மலைப்பகுதியில் வீசிய  வாலிபர், நண்பருடன் கைது செய்யப்பட்டார்.

murder
மஹாராஷ்டிரா மாநிலம் மும்பை வில்லேபார்லே பகுதியை சேர்ந்த இளம்பெண் பிங்கி ,வில்லேபார்லே பகுதியை சேர்ந்த 27 வயதான சிக்கோ என்ற வாலிபரை காதலித்து வந்து உள்ளார். இருவரும் அடிக்கடி ஜாலியாக பார்க் ,ஹொட்டேல் என்று ஜாலியாக இருந்து வந்தனர் .எனினும் அவர்கள் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. இதற்கு  அந்த பெண் அந்த காதலனிடம் கல்யாணம் செய்து கொள்ள வற்புறுத்தியதுதான் காரணம் .இதனால் அந்த காதலன் அந்த பெண்ணை ஒரு நாள்  மும்பை - ஆமதாபாத் சாலையில் கூட்டி சென்று கத்தியால் குத்தி கொலை செய்து விட்டார் .பின்னர் அவரின் நண்பருடன் சேர்ந்து அவரின் முகத்தை கற்களால் சிதைத்து அங்குள்ள ஒரு மலைப்பகுதியில் வீசி விட்டு சென்றார் .இதனால் போலீசார் அந்த பெண்னின் உறவினர் கொடுத்த புகாரின் பேரில் ,அப்பெண்ணின் சடலத்தை கைப்பற்றி விசாரணை நடத்தினர் 
இதையடுத்து போலீசார் இளம்பெண்ணின் காதலன் சிக்கோ மற்றும் கொலைக்கு உடந்தையாக இருந்த அவரின் நண்பர்  தேவேந்திராவை கைது செய்தனர்.