"கல்யாணமான பெண்ணை கண்ட லாட்ஜுக்கு கூட்டி போய்..." -வேலை கேட்டதால் நடந்த விபரீதம்
வேலை கேட்ட திருமணம் ஆன பெண்ணை பலமுறை பலாத்காரம் செய்த வாலிபர் மீது போலீஸ் வழக்கு பதிவு செய்தது
குஜராத்தின் சூரத்தில் மொட்டா வரச்சா பகுதியில் நிலேஷ் லத்தியா என்ற 23 வயது வாலிபர் வசித்து வந்தார் .இந்நிலையில் சார்தனா பகுதியில் ஒரு 35 வயதான பெண் தனது கணவர் மற்றும் குழந்தையுடன் வசித்து வந்தார் .அந்த பெண் படித்து விட்டு வேலையில்லாமல் வீட்டிலேயே இருந்ததால் அவர் வேலைக்கு செல்ல ஆசைப்பட்டு .அந்த லத்தியவை தொடர்பு கொண்டு வேலை கேட்டார் .
அந்த சந்தர்பத்தை நன்றாக பயன்படுத்திக்கொண்ட அந்த வாலிபர் அந்த பெண்ணுக்கு வேலை வாங்கி கொடுப்பதாக கூறி ஒரு ஹோட்டலுக்கு வர சொன்னார் .பின்னர் அந்த ஹோட்டலில் வைத்து அந்த பெண்ணை பலாத்காரம் செய்து விட்டு ,அவரை நிர்வாணமாக பல கோணங்களில் படம் எடுத்தார் .பிறகு அந்த நிர்வாண போட்டோவை அந்த பெண்ணிடம் காண்பித்து ,இதை சமூக ஊடகத்தில் வெளியிடுவதாக மிரட்டி பலமுறை அவரின் உறவினர் வீட்டில் வைத்து பலாத்காரம் செய்தார் .
இதனால் அந்த பெண் மிகவும் மன வேதனையடைந்து , அங்குள்ள காவல் நிலையத்தில் சென்று அந்த லத்தியா மீது புகார் கொடுத்தார் .அவர் அளித்த புகாரின் பேரில், சம்பந்தப்பட்ட நபர் மீது போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர் .