"கல்யாணம் செஞ்சி வைக்கிறேன்னு கட்டி வச்சி ..."ஒரு தரகரிடம் 17 நாள் சிக்கிய பெண்.

 
man cheating and rape a women by marriage

திருமணத்திற்கு நல்ல வரன் தேடி வருவதாக பெண்ணை  கற்பழித்துவிட்டு தலைமறைவாகிவிட்ட நபர்  மீது போலீசில் இளம்பெண் புகார் அளித்துள்ளார்.

rape

கர்நாடக மாநிலம் சாம்ராஜ்நகர் மாவட்டம் கொள்ளேகால் டவுனில் இளம் பெண் ஒருவர் வசித்து வருகிறார். அந்த பெண் வசிக்கும் வீட்டுக்கு கொள்ளேகால் தாலுகா ஹளே அகனஹள்ளி கிராமத்தை சேர்ந்தவர் 37 வயதான துரைசாமி என்பவர் அடிக்கடி வருவார் .இவர் விவசாய வேலையும் கூடவே கல்யாணத்திற்கு வரன் தேடும் வேலையும் செய்து வந்தார் 

இந்நிலையில் அவர் அந்த பெண்ணின்  பெற்றோரிடம் உங்கள் பெண்ணுக்கு நல்ல வரன் தேடி கொடுப்பதாக கூறி,அந்த பெண்ணை தன்னுடைய வீட்டுக்கு அழைத்து சென்றார் .பின்னர் அந்த பெண்ணை கட்டி வைத்து,கத்தாமல் இருக்க அவரின் வாயில் துணியை திணித்து  ,அவரை பலாத்காரம் செய்தார் .
பிறகு அந்த பெண் தனக்கு  அந்த துரைசாமியால் நேர்ந்த கொடுமையை கூறினார் .அதன் பிறகு அந்த பெண் அவரையே கல்யாணம் செய்து கொள்வதாக கூறியதும், அவர்கள் அந்த துரைசாமிக்கு அவரின் மகளை ஒரு கோவிலில்  வைத்து திருமணம் செய்து கொடுத்தனர்  .
பின்னர் அந்த பெண்ணுடன் 17 நாள் ஜாலியாக இருந்த அந்த துரைசாமி அதன் பிறகு தலைமறைவாகிவிட்டார் .இதனால் அந்த பெண் தனது கணவனை தேடி கொடுக்குமாறு போலீசில் புகார் கொடுத்தார் .போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்