"இவளை கெடுத்தாச்சி ,அடுத்து என்ன செய்யலாம்" -யோசித்த வாலிபரால் பெண்ணுக்கு நேர்ந்த பரிதாபம்
விறகு வெட்ட சென்ற 14 வயதான பெண்ணை பலாத்காரம் செய்து கழுத்தை நெரித்து கொன்றவரை போலீஸ் தேடி வருகிறது
குஜராத் மாநிலம் பரூச் நகரில் உள்ள அமோத் தாலுகாவின் சர்பன் கிராமத்தில் 14 வயதான பெண் தன்னுடைய பெற்றோருடன் அசித்து வந்தார் .அந்த பெண் தினமும் அங்குள்ள ஒரு பருத்தி பண்ணைக்கு விறகு வெட்ட செல்வது வழக்கம் .இதை அந்த பகுதியில் வசிக்கும் ஒரு வாலிபர் நோட்டமிட்டு வந்துள்ளார்
இந்நிலையில் கடந்த திங்கள்கிழமை மாலை அந்த பெண் வழக்கம் போல் விறகு வெட்ட சென்றபோது அந்த வாலிபர் பின் தொடர்ந்து வந்து அந்த பெண்ணை அந்த பருத்தி பண்ணைக்கு இழுத்து சென்றார் .பின்னர் அவரை பலாத்காரம் செய்து விட்டார் .அதன் பிறகு இவரை உயிரோடு விட்டால் தன்னை காமித்து கொடுப்பார் என்று நினைத்த அவர் அந்த பெண்ணை கொலை செய்து விட்டு அங்கிருந்து தப்பியோடிவிட்டார் .பின்னர் அந்த பெண்னின் பெற்றோர் மகளை காணாமல் போலீசில் புகார் கூறினர் .போலீசார் வழக்கு பதிந்து அந்த பெண்ணை தேடி அவரை பிணமாக மீட்டனர்
பிறகு மீட்கப்பட்ட அந்த பெண்ணின் உடல் பிரேத பரிசோதனைக்காக பருச் சிவில் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. பிரேத பரிசோதனை அறிக்கையில் இளம்பெண் பலாத்காரம் செய்யப்பட்டு கழுத்தை நெரித்து கொலை செய்யப்பட்டது தெரியவந்தது.போலீசார் அந்த குற்றவாளியை தேடி வருகின்றனர் .