"எனக்கு தாலி கட்டு ,இல்லேன்னா நடைய கட்டு .."அடுத்து விதவைக்கு நேர்ந்த விபரீதம் .

 
women Rape


திருமணத்துக்கு வற்புறுத்திய  ஒரு விதவை பெண்ணை அவரின் கள்ள காதலன் கொலை செய்தார் .

marriage
குஜராத்தின்  வதோதராவில்  சவ்லி தாலுகாவில் உள்ள மஞ்சுசார் குடியிருப்பில் ஷைலேஷ் வகேலா என்ற 35 வயதான நபர் தன்னுடைய மனைவி மற்றும் குழந்தைகளுடன் வசித்து வந்தார் .இந்த தம்பதிகளுக்கு கால்யாணம் ஆகி ஆறு வருடம் ஆகிறது .இந்நிலையில் அந்த வகேலாவுக்கு அதே பகுதியில் வசிக்கும் 32  வயதான ஹன்சா பர்மர் என்ற விதவை பெண்ணுடன் கள்ள உறவு ஏற்பட்டது இதனால் இருவரும் அடிக்கடி  தனிமையில் சந்தித்து உல்லாசமாக  இருந்து வந்தனர் .அதன் பிறகு அந்த விதவை பெண் அந்த வகேலாவிடம் தன்னை கல்யாணம் செய்து கொள்ளுமாறு பலமுறை வற்புறுத்தி வந்தார் .
இதனால் அந்த வகேலா என்ன செய்வதென்று யோசித்தார் .ஆனால் அந்த பெண் தொடர்ந்து அவரை கல்யாணம் செய்ய டார்ச்சர் செய்ததில்  ,அவர் அந்த பெண்ணை கொலை செய்ய முடிவு செய்தார் .அதனால்  கடந்த வாரமொரு நாள் இரவு, அந்த பெண்ணை ஒரு இடத்திற்கு வர சொன்னார் .பின்னர் அவருடன் ஜாலியாக இருப்பது போல் நடித்து , அவரை கத்தியால் குத்தி கொலை செய்து விட்டார் .பிறகு அவரின் உடலை அங்கயே வீசி விட்டு ஓடிவிட்டார் .
இரண்டு நாளுக்கு பிறகு  போலீசுக்கு தகவல் தெரிந்து, அந்த விதவையின் பிரேதத்தை கைப்பற்றி விசாரணை நடத்தினர் .அப்போது அந்த பகுதியில் வசிக்கும் வகேலாவினை கைது செய்து விசாரித்த போது ,அவர் அந்த பெண்ணை கொலை செய்த குற்றத்தை ஒப்புக்கொண்டதும்  போலீஸ் அவரை கைது செய்தது .