"எப்படியிருந்த காதலி இப்படி ஆயிட்டாளே .." -காண்டான காதல் கணவன் என்ன செஞ்சார் தெரியுமா ?
காதல் மனைவி பிரிந்து சென்ற விரக்தியில் காதல் திருமணம் செய்த காதலன் தற்கொலை செய்து கொண்டார்.
தமிழகத்தின் வாழப்பாடி அருகே குறிச்சி ரெங்கனூர் பகுதியை சேர்ந்தவர் 23 வயதான பிரபாத் , திவ்யா என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். அதன் பின்னர் அவர்கள் தங்களின் பெற்றோருடன் கூட்டுக் குடும்பமாக வாழ்ந்து வந்தார்கள் .
அதன் பிறகு அந்த கணவருக்கும் அந்த காதல் மனைவிக்குமிடையே அடிக்கடி தகராறு வந்துள்ளது ,இதனால் அந்த பெண் அந்தக் கணவரிடம் கோபித்துக்கொண்டு தன்னுடைய பெற்றோர் வீட்டுக்கு போய் விட்டார் .அதன் பிறகு அந்த கணவர் தனியாக வசித்து வந்தார் .அப்போது அவர் பலமுறை அவரின் மனைவியை குடும்பம் நடத்த வருமாறு போனில் கூப்பிட்டார் .ஆனால் அவர் மறுத்துள்ளதால் ,மனம் வெறுத்த அந்த கணவர் தன்னுடைய தந்தையிடம் தன் மனைவியை கூட்டி வருவதாக கூறி வீட்டை விட்டு போனார் .பின்னர் அவர் ஒரு தனிமையான இடத்தில் விஷம் குடித்து விட்டு உயிருக்கு போராடி கிடந்தார் .அப்போது அக்கம் பக்கத்தினர் அந்த நபரை மீட்டு அருகிலுள்ள ஹாஸ்ப்பிட்டலில் சிகிச்சைக்கு சேர்த்தனர் .ஆனால் அந்த பிரபாத் சிகிச்சை பலனின்றி அங்கேயே இறந்து போனார் .பின்னர் போலீசுக்கு தகவல் தெரிந்து வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர் .