"ஐ போன் கொடு ,அப்புறம் என்னை தொடு" -காதலியின் கட்டளையால் ஒரு காதலனின் கதி

 
love

காதலிக்கு ஐபோனை  பரிசாக வழங்குவதற்காக ஐபோனைக் கொள்ளையடித்த இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டார்.

iPhone 13 Pro

 மேற்கு டெல்லியில் வசிக்கும் இரண்டு வாலிபர்கள் எந்த வேலைக்கும் போகாமல் இருந்தனர் .அவர்களில் ஒருவர் ஒரு பெண்ணை காதலித்தார் .அந்த காதலி அவரிடம் போன் கேட்டு தொல்லை கொடுத்தார் .இதனால் எந்த வேலையும் இல்லாமலிருந்த அந்த வாலிபர் காதலிக்கு அந்த போனை கொடுத்து ,அங்குள்ள ஹில்ஸ் பகுதிக்கு கூட்டி செல்ல என்ன செய்யலாம் என்று ஒரு பார்க்கில் உட்கார்ந்து யோசித்தார்

அப்போது அந்த  பூங்காவில் ஒரு நபர் போன் வைத்திருப்பதை பார்த்தார் .உடனே அந்த நபரின் கழுத்தில் கத்தியை வைத்து அவரிடம் இருந்த ஆப்பிள் ஐபோனை அந்த இரு நபர்கள் சேர்ந்து கொள்ளையடித்தனர். இந்த சம்பவம் டெல்லியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

அடுத்து  அந்த இரு கொள்ளையர்கள் துவாரகா செக்டார் 14 பகுதியில் மீண்டும் ஒரு கொள்ளைச் சம்பவத்தில் ஈடுபடுவதாக புதன்கிழமையன்று இரகசியத் தகவல் கிடைத்தது. இதையடுத்து, போலீசார் வலைவீசி குற்றவாளிகள் இருவரையும் கைது செய்தனர்.

 

 இந்த சம்பவம் தொடர்பாக குற்றம் சாட்டப்பட்ட இருவர் மீதும் இந்திய தண்டனைச் சட்டத்தின் பல்வேறு பிரிவுகளின் கீழ் போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணையைத் தொடங்கினர்.ஒரு காதலிக்காக ஒரு வாலிபர் கொள்ளையனாக மாறிய சம்பவம் பலரை அதிர்ச்சியில் தள்ளியது .