" மயக்கம் தெளியரத்துக்குள்ள பல பேர் ஆசையை தீர்த்துக்கிட்டானுங்க " -15 வயது பெண்ணுக்கு நடந்த பயங்கரம் .
குளிர்பானத்தில் மயக்க மருந்து கலந்து கொடுத்து சிறுமியை பாலியல் தொழிலில் ஈடுபடுத்திய 2 பெண்கள் உள்பட 9 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.
தமிழகத்தின் அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே உள்ள உடையார்பாளையம் பகுதியை சேர்ந்த சாந்தா 15 வயது சிறுமி ஒருவரை வீட்டு வேலைக்காக கடந்த 3 மாதங்களுக்கு முன்பு அழைத்து சென்றுள்ளார். பிறகு அந்த சாந்தா, அந்த சிறுமியை, சந்திரா என்ற பெண்ணிடம் ஒப்படைத்துள்ளார்.
சந்திரா, அந்த சிறுமியை தஞ்சாவூர் மாவட்டத்தின் பல பகுதிகளுக்கு அழைத்துச்சென்று குளிர்பானத்தில் மயக்க மருந்து கலந்து கொடுத்து பாலியல் தொழிலில் ஈடுபடுத்தி உள்ளார்.அதன் பிறகு அவருக்கு உடல்நிலை பாதிக்கப்பட்டதில் அவரை அவரின் பெற்றோரிடம் ஒப்படைத்து விட்டு ஓடிவிட்டனர் .பின்னர் அந்த பெண் தனக்கு நேர்ந்த கொடுமையை அவரின் பெற்றோரிடம் கூறியதும் அவர்கள் போலீசில் புகாரளித்தனர்
.இதையடுத்து போலீசார் சாந்தா, சந்திரா மற்றும் சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்ததாக வினோத் , பிரேம் , பாலு மற்றும் செந்துறை சேர்ந்த தனவேல் உள்பட 9 பேரை போலீசார் நேற்று கைது செய்தனர்