சிவப்பாக மாறிய சிறுமியின் சீருடை - வாத்தியாரால் எல். கே. ஜி. மாணவிக்கு நேர்ந்த வன்கொடுமை- 5000 பள்ளிகள் மூடல்
எல்.கே.ஜி., மாணவியை வன்கொடுமை செய்த வாத்தியார் பணிபுரியும் ஸ்கூல் நிர்வாகியை, போலீஸ் கைது செய்ததை கண்டித்து 5000 பள்ளிகள் மூடி தங்களின் எதிர்ப்பை தெரிவித்தனர்
பஞ்சாப் மாநிலத்தின் குர்தாஸ்பூர் மாவட்டத்தில் உள்ள ஒரு தனியார் பள்ளியில், எல்.கே.ஜி., படிக்கும் சிறுமி, அந்த பள்ளி ஆசிரியர் ஒருவரால் பள்ளி வகுப்பறையிலேயே , பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டார். அந்த சிறுமி வீட்டுக்கு வந்த பின் வலியாலும் ,வழிந்தோடிய ரத்தத்திலும் துடித்ததால் ,அந்த சிறுமியை, அவரின் தாய் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றார். அப்போது அவரை பரிசோதனை செய்த டாக்டர்கள் சிறுமி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு இருப்பதை உறுதி செய்தனர்
இதையடுத்து, குழந்தையின் பெற்றோர், போலீசில் புகார் செய்ததால் ,போலீசார் அந்த பள்ளிக்கு வந்து அந்த பள்ளியிலிருந்த கரஸ்பாண்டெண்ட்டை கைது செய்தனர் .இதற்கு எதிப்பு தெரிவித்து , அந்த மாநிலத்தில் உள்ள 5000 பள்ளிகள் மூடப்பட்டு தங்களின் கண்டனத்தை தெரிவித்தன .இது பற்றி தனியார் பள்ளி சங்க தலைவர் கூறும்போது ,அரசு பள்ளியில் இப்படி ஒரு சம்பவம் நடந்திருந்தால் அந்தமாவட்ட கல்வி அதிகாரியை போலீஸ் கைது செய்வார்களா? என்று கேட்டனர் .இந்த சம்பவம் அம்மாநிலத்தில் பெரும் பரபரப்பை உண்டு பண்ணியுள்ளது .