"ரெண்டு குழந்தைக்கு தாயான என்னை ஏண்டா ..."22 வயது வாலிபரிடம் சிக்கிய கல்யாணமான பெண்

 
women murder by her friend family

கல்யாணமான பெண்ணை அடைய முடியாத கோவத்தில் ஒரு வாலிபர் அந்த பெண்ணை கொலை செய்தார் 

rape
ராஜஸ்தானின் ஜலோர் மாவட்டத்தில் உள்ள அஹோர் பகுதியில்  தன்வாலா என்ற இடத்தில் 22 வயதான கணேஷ்ராம் என்ற வாலிபர் வசித்து வந்தார் .அந்த நபரின் வீட்டருகே 32 வயதான பெண்ணொருவர் திருமணமாகி இரண்டு குழந்தைகளுக்கு தாயாகி .தனியே வசித்து வந்தார் .அந்த பெண்ணின் கணவர் மஹாராஷ்ட்ரா மாநிலத்தில் ஒரு தனியார் நிறுவனத்தில் பணி புரிகிறார் .
இந்நிலையிள் அந்த பெண் கணவர் இல்லாமல் தனியே வசிப்பதை கவனித்து அந்த கணேஷ்ராம் அந்த பெண்ணுக்கு வலை வீசினார் .ஆனால் அந்த பெண் அவரின் ஆசை வலையில் விழாமல் அவரை புறக்கணித்து ,அவரை இனி தன் வீட்டு பக்கம் வரக்கூடாது என்று திட்டி அனுப்பியுள்ளார் .இதனால் கோபமுற்ற அந்த கணேஷ் ராம் அந்த பெண்ணை கொலை செய்ய முடிவெடுத்தார் .
அதன் படி கடந்த வாரம் அந்த பெண் வேலை பார்க்குமிடத்தில்  தனியாக இருந்த போது ,அந்த கணேஷ் ஒரு கூர்மையான ஆயுதத்தோடு அந்த இடத்திற்கு  வந்தார் .அதன் பிறகு அந்த பெண்ணை கழுத்திலும் ,நெஞ்சிலும் சரமாரியாக குத்தி கொலை செய்தார் .இதனால் அந்த பெண் சம்பவ இடத்திலேயே மரணமடைந்தார் .பிறகு போலீசார் தகவல் தெரிந்து  அந்த இடத்திற்கு வந்து, அந்த வாலிபர் கணேஷுராமினை கைது செய்து சிறையில் அடைத்தனர் .பின்னர் இறந்த பெண்ணின் உடலை பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர் .