"உடலுறவுக்கு வந்தால் ,வேலைக்கே வரவேணாம்.." -மேலாளரிடம் சிக்கிய பெண் ஊழியர்களின் கதை

 
sex work


பெண் பணியாளர்களை உல்லாசத்திற்கு அழைத்த ஒரு மேனேஜரை போலீசார் கைது செய்தனர் .

sex


 தமிழகத்தின் செங்கல்பட்டு மருத்துவமனை மேலாளராக கபில் என்பவர் பணியாற்றி வருகிறார்.இவர் மீது பல பெண் ஊழியர்களை பாலியல் கொடுமை செய்வதாக புகார்கள் வந்தது .இந்நிலையில் இவர் கடந்த சில நாட்களுக்கு முன்பு வேலைக்கு சென்று  கொண்டிருந்த ஒரு தூய்மை பணியாளர் பெண்ணை ,வேலைக்கு போகாமல் தன்னுடன் உல்லாசத்திற்கு வருமாறும் ,வேலைக்கு செல்லாமலே சம்பளம் தருவதாகவும் கூறி உல்லாசத்திற்கு அழைத்தார் .ஆனால் அந்த பெண் அவரை நிராகரித்துவிட்டு  அரசு மருத்துவமனைக்கு பணிக்கு சென்றுவிட்டார்.  
மேலும், இச்சம்பவம் குறித்து மேலாளர் மீது தக்க நடவடிக்கை எடுக்குமாறு நிலைய மருத்துவ அதிகாரியிடம் புகார் தெரிவித்துள்ளார். இந்த சம்பவத்திற்கு அரசு மருத்துவமனையில் பணியாற்றும் மருத்துவர்கள் மற்றும் ஒப்பந்த ஊழியர்கள் சிலர் துணைபோய் இருப்பது தெரியவந்தது. மேலும், கபில் மீது நிலைய மருத்துவ அதிகாரியிடம் கொடுத்த புகாரை வாபஸ் வாங்க வலியுறுத்தி, அந்த பெண்ணிற்கு கொலை மிரட்டல் விடுத்த செல்லா, தமிழ்ச்செல்வி அவரது அம்மா மற்றும் மேலாளர் கபில் மீது செங்கல்பட்டு நகர காவல் நிலையத்தில் அந்த பெண் புகார் அளித்தார்.
 போலீசார்  வழக்கு பதிந்து அந்த மேனேஜர் கபிலை   கைது செய்து, தலைமறைவாக உள்ள மூன்று பெண்களையும் தீவிரமாக தேடி வருகின்றனர்.