பள்ளியில் பாத்ரூம் போன மாணவி -சுத்தம் செய்து கொண்டிருந்த வாலிபர் -அடுத்து அங்கேயே அரங்கேறிய அவலம்
ஒரு பள்ளியின் பாத்ரூமில் ஒரு மாணவியை ஒரு துப்புரவு தொழிலாளி பலாத்காரம் செய்ததால் கைது செய்யப்பட்டார் .
உத்திர பிரதேச மாநிலம் வாரணாசியில் உள்ள தனியார் பள்ளியில் சிக்ரா காவல் நிலையத்திற்கு உட்பட்ட லஹர்தாரா பகுதியில் உள்ள ஒரு பள்ளியில் ஒரு மைனர் மாணவி படித்து கொண்டிருந்தார் .அவர் கடந்த வியாழக்கிழமை வழக்கம்போல் பள்ளி சீருடை அணிந்து கொண்டு ஸ்கூலுக்கு சென்றார் .பின்னர் அவருக்கு பள்ளியின் வகுப்பு நடக்கும் நேரத்தில் வயிறு வலித்ததால் ஆசிரியரிடம் அனுமதி கேட்டு விட்டு அங்குள்ள பாத்ரூமுக்கு தனியே சென்றார் .
அப்போது அந்த பள்ளியின் பாத்ரூமை அந்த பள்ளியின் துப்புரவு தொழிலாளி சிங்கு என்ற 23 வயதான வாலிபர் சுத்தம் செய்து கொண்டிருந்தார் .அப்போது அந்த வாலிபர் அந்த பெண் பாத்ரூம் போக பாத்ரூமுக்குள் சென்றதும் உள் பக்கம் தாழ்ப்பாள் போட்டுவிட்டார் .பின்னர் அந்த இடத்திலேயே அவரை பாலியல் பலாத்காரம் செய்தார் .அதன் பிறகு அந்த மாணவி அங்கிருந்து தப்பி வந்து தனக்கு நேர்ந்த கொடுமையை அவரின் பெற்றோர் மற்றும் நண்பர்களிடம் கூறினார் .அதை கேட்டு அதிர்ச்சியடைந்த அவர்கள் அந்த சிங்கு மீது போலீசில் புகார் கொடுத்தனர் .பின்னர் போலீசார் அந்த பள்ளியின் பள்ளியின் சிசிடிவி காட்சிகளை சரிபார்த்த பின்னர் குற்றம் சாட்டப்பட்ட சிங்கு மீது போலீசார் வழக்கு பதிவு செய்து அவரை கைது செய்தனர் .