ஓடி ஒளிஞ்ச எம் .எல். ஏ. மகன் -தேடி பிடித்த போலீஸ் -அப்படி அவர் என்னதான் செஞ்சார் ?

 
teenej girl gang rape by two man

பாலியல் பலாத்கார வழக்கில் தலைமறைவான  எம்.எல்.ஏ., மகனை போலீசார் நேற்று கைது செய்தனர்.

arrested

மத்திய பிரதேச மாநிலம் இந்துாரில் உஜ்ஜைன் மாவட்டம் பட்நகர் சட்டசபை தொகுதியின் காங்கிரஸ் எம்.எல்.ஏ., முரளி மோர்வால். இவரது மகன் 22 வயதான கல்லூரி மாணவர் கரண் மோர்வால். இவர் கடந்த  ஏப்ரல் .2ம் தேதி  அந்த தொகுதியை சேர்ந்த ஒரு பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்து விட்டார் .இதனால் பாதிக்கப்பட்ட அந்த பெண்ணின் உறவினர்கள் , இது பற்றி அந்த வாலிபரின் தந்தையான அந்த சட்டமன்ற உறுப்பினரிடம் முறையிட்டனர் .ஆனால் அதற்கு சரியான நீதி கிடைக்காததால் அவர்கள் , இந்துார் அனைத்து மகளிர் போலீஸ் ஸ்டேஷனில் பாலியல் பலாத்கார வழக்கு  பதிவு செய்தனர் . அதன் பிறகு அந்த சட்டமன்ற உறுப்பினரின் மகனை போலீசார் தேடிய போது அவர் கிடைக்கவில்லை .பிறகு தலைமறைவான அவரை ஆறு மாதங்களுக்கும் மேலாக போலீசார் தீவிரமாக தேடி வந்தனர்.

அவர் கிடைக்காததால் அவரை பற்றி தகவல் தெரிவிப்போருக்கும் ,அவரின்  கைது நடவடிக்கைக்கு உதவுவோருக்கும்  25 ஆயிரம் ரூபாய் பரிசு வழங்கப்படும்' என, போலீசார் அறிவித்திருந்தனர். அதன் பிறகும் கடந்த ஆறு மாதமாக அவரை  பற்றி ஒரு துப்பும் போலீசுக்கு கிடைக்கவில்லை .இந்நிலையில், ஷாஜாபூர் மாவட்டத்தில் பதுங்கியிருந்த கரண் மோர்வாலை போலீசார் நேற்று கைது செய்தனர். அவரை காவலில் எடுத்து விசாரிக்க போலீசார் திட்டமிட்டு உள்ளனர்.