"ஹோட்டலில் அடைத்து ,ஒவ்வொருவராய் நுழைந்து.." -போட்டோ எடுக்க போன பெண்ணை வாட்டியெடுத்த கூட்டம்

 
rape

விளம்பரத்தில் நடிக்க போட்டோ எடுப்பதாக அழைத்துச் சென்று மாடல் அழகியை 3 நாட்கள் வைத்து பாலியல் பலாத்காரம் செய்த கூட்டத்தை போலீஸ் தேடி வருகிறது 

gang rape
 
கேரளா மாடல் அழகி ஒருவரை ஆலப்புழாவைச் சேர்ந்த சலீம் என்பவர் விளம்பரத்தில் நடிக்க வாய்ப்பு கொடுப்பதாக கூறி அழைத்துள்ளார். அவரது பேச்சை நம்பி, அந்த மாடல் அழகியும் கொச்சியின் இடத்திரா பகுதியில் உள்ள லாட்ஜுக்கு சென்றுள்ளார். அப்போது அந்த லாட்ஜில் அந்த சலீம் அந்த பெண்ணிடம் போட்டோ எடுக்க வேண்டும் என்று  கூறி ,குடிக்க மயக்க மருந்து கலந்த ஜூஸை கொடுத்தார் .அதை வாங்கி குடித்ததும் அந்த பெண் மயங்கி விழுந்தார் .பின்னர் அவரை அந்த லாட்ஜில் உள்ள ஒரு ரூமில் அடைத்து வைத்தனர் .அதன் பிறகு அந்த பெண்ணை மயக்க நிலையில் அந்த சலீம் மற்றும் மேலும் இருவரும் சேர்ந்து மூன்று நாட்கள் பலாத்காரம் செய்தனர் ,அதன் பிறகு அவ்ர்கள் அந்த பெண்ணை மூன்று நாட்களுக்கு பிறகு மயக்கம் தெளிந்ததும் விடுவித்தனர் .
பிறகு அந்த பெண் தனக்கு நேர்ந்த கொடுமையை அங்குள்ள போலீசில் புகார் கொடுத்தார் .போலீசார் வழக்கு பதிந்து  சலீம் என்பவரை கைது செய்து மேலும் ,ஷமீர், அஜ்மல்  ஆகியோரையும் தேடி வருகின்றனர் .இது சம்பந்தமாக இதற்கு உடந்தையாக இருந்த லாட்ஜ் உரிமையாளர் ஒருவரையும் தேடி வருவதாக கூறப்படுகிறது..