"என் கட்டான உடம்பை பார்த்து கட்டிலுக்கு வந்த தொழிலதிபர் பெண்கள் "-பலாத்கார அனுபவங்களை பகிர்ந்த மாடலிங் வாலிபர்.

 
accust

 20 இளம் பெண்களை பாலியல் பலாத்காரம் செய்த வழக்கில் கைதான 'மாடலிங்' வாலிபரிடம் சிக்கிய பெரிய இடத்து பெண்கள் பற்றி பல ரகசியங்கள் வெளிவந்துள்ளன 

சென்னை, கீழ்ப்பாக்கம்மில்லர்ஸ் சாலையைச் சேர்ந்த 27 வயதான முகமது ஷயாத்,மாடலிங்' தொழில் செய்து வந்தார்.
அவர்  தன்னுடன் பழகிய இளம் பெண்கள், பேஷன் டெக்னாலஜி மாணவியர் என, 20க்கும் மேற்பட்ட இளம் பெண்களுக்கு காதல் வலை வீசி, திருமண ஆசை காட்டி, பாலியல் பலாத்காரம் செய்துள்ளார்.இவரை, சென்னை வேப்பேரி மகளிர் போலீசார் கைது செய்து, சைதாப்பேட்டை கிளை சிறையில் அடைத்துள்ளனர்.
. இவரது மொபைல் போனில், விதவிதமான இளம் பெண்களின் அந்தரங்க படங்கள் மற்றும் ஆபாச வீடியோக்கள் இருந்தன.மூன்று ஆண்டுகளாக முகமது ஷயாத், இதுபோன்ற களியாட்டத்தில் ஈடுபட்டுள்ளார். இவர் 40க்கும் மேற்பட்ட பெண்களை பாலியல் பலாத்காரம் செய்து இருக்கலாம் என, போலீசாருக்கு சந்தேகம் ஏற்பட்டுள்ளது.அவர் அளித்த வாக்குமூலத்தில், 'ஆறு மாதங்களில் ஆன்லைன் வாயிலாக, 100 அறைகளை முன்பதிவு செய்து, இளம் பெண்களுடன் நெருக்கமாக இருந்துள்ளேன்' என, தெரிவித்துள்ளார். மேலும் அவரின் கட்டுடல் கண்டு மயங்கி பல தொழிலதிபர்களின் மகள் கள் அவரின் வலையில் விழுந்துள்ளனர் .அவர்களை அரை நிர்வாண படம் எடுத்து, வெளிநாடுகளுக்கு அனுப்பி ,துபாய் உள்ளிட்ட வெளிநாடுகளுக்கும், இளம் பெண்களை அழைத்துச் சென்றுள்ளார்.பாதிக்கப்பட்ட இளம்பெண்களிடம் ரகசிய விசாரணை
பாலியல் வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள முகமது சயாத்தால் பாதிக்கப்பட்ட இளம் பெண்களிடம் மகளிர் போலீசார் சாதாரண உடையில் தங்களது ரகசிய விசாரணையை தொடங்கியுள்ளனர். பாலியல் வழக்கு என்பதால் புகார் அளித்த நபர்களிடம் நடத்திய விசாரணை குறித்து எந்த தகவல்களையும் போலீசார் வெளியிடவில்லை. அதேநேரம், பாதிக்கப்பட்ட பெண்களில் பலர் தொழிலதிபர்களின் மகள்கள் என்பதால் மிகவும் கவனமாக விசாரணை நடத்தப்பட்டு வருவதாக போலீசார் தெரிவித்தனர்.