"அடப்பாவி இப்படி கேமரா வச்சி கெடுத்துட்டியே" -ஒரு காதலனால் காதலிக்கு நேர்ந்த கதி
ஒரு பெண்ணை மிரட்டி பலாத்காரம் செய்து வீடியோ எடுத்து வைரலாக்கியதால் அவர் தற்கொலை செய்து கொண்டார்
ராஜஸ்தானின் உதய்பூரில் வசிக்கும் ஒரு 17 வயதான தலித் பெண்ணொருவர் அகமதாபாத்தில் வசிக்கும் ஒரு வாலிபருடன் நட்போடு பழகி வந்தார். அந்த வாலிபர் ஒரு நாள் அந்த பெண்ணை ஒரு இடத்தில் சந்திக்க வர சொன்னார் .அப்போது அவரை பார்க்க சென்ற அந்த பெண்ணை அவர் மிரட்டி பலாத்காரம் செய்துள்ளார் .அப்போது அவர் அந்த பெண்ணுக்கு தெரியாமல் அந்த பலாத்கார காட்சியை வீடியோ எடுத்துள்ளார் .
அதன் பிறகு அந்த வாலிபர் கடந்த ஐந்தாம் தேதி அந்த பலாத்க்கார வீடியோவை சமூக ஊடகத்தில் வெளியிட்டு விட்டார் .அந்த வீடியோ வைரலானதும் அந்த வீடியோவை பலர் பார்த்து, அந்த பெண்ணிடம் இது பற்றி கேட்டுள்ளார்கள் .இதனால் மிகவும் மன வேதனையடைந்த அந்த பெண் கடந்த ஏழாம் தேதி தற்கொலை செய்து கொண்டார் .
இதனால் அந்த பெண்ணின் பெற்றோர் அங்குள்ள காவல் நிலையத்தில் அந்த குற்றவாளி வாலிபரை கைது செய்ய வலியுறுத்தினர் .ஆனால் போலீசார் சரியான நடவடிக்கையை அந்த காதலன் மீது எடுக்காமல் காலம் தாழ்த்தியதாக கூறி அந்த பெண்ணின் பெற்றோர் போராட்டம் செய்தனர் .அதன் பிறகு போலீஸ் உயரதிகாரிகள் அந்த வழக்கை விசாரித்து அந்த பெண்ணை இந்நிலைக்கு ஆளாக்கிய வாலிபரை கைது செய்தனர் .அப்போது அவரின் போனில் அந்த பெண்ணோடு இருந்த போட்டோக்களை கைப்பற்றி விசாரித்து வருகின்றனர்