"கூட்டி கொடுத்த தாயை காட்டி கொடுத்த மகள்"-அடுத்து அம்மாவின் கதி?
மகளை தன்னுடைய கள்ள காதலனுக்கு கூட்டி கொடுத்த தாயையும் ,காதலனையும் கைது செய்தனர்.
தமிழகத்தின் கன்னியாகுமரி மாவட்டம் புதுக்கடை அருகே அள்ளம் சேனவிளை பகுதியை சேர்ந்தவர் 48 வயதான ராஜையன் பர்னிச்சர் கடை வைத்துள்ளார். அவருக்கு அங்கு வேலை செய்யும் 37 வயது சுனிதா என்ற பெண்ணுடன் கள்ளத்தொடர்பு ஏற்பட்டுள்ளது. இதனால் ஞாயிற்றுக்கிழமைதோறும் ராஜையன் அந்த பெண்ணின் வீட்டிற்கு வந்து சுனிதாவுடன் தனிமையில் உல்லாசமாக இருப்பார். கடந்த ஜனவரி மாதம் 23 ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை சுனிதாவின் வீட்டிற்கு ராஜையன் வந்தார்.
சுனிதா வீட்டிற்கு சென்ற ராஜையன், அவரது 16 வயது மகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்து வந்தார் . குடும்பமே வறுமையில் இருந்த நிலையில் சுனிதா அவருடன் ஜாலியாக இருக்குமாறு கூறினார் .இந்த நிலையில் கடந்த இரண்டு நாட்களுக்கு முன் சுனிதாவின் 16-வயது மகள் மாவட்ட குழந்தைகள் நல அலுவலரை தொலைபேசியில் தொடர்பு கொண்டு தனக்கு நேரும் கொடுமை பற்றி புகார் கூறினார்
அதன் பேரில் போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தினர். இதில் சிறுமி மீதான பாலியல் தொல்லைக்கு தாயும் உடந்தையாக இருந்தது தெரிய வந்தது. இதையடுத்து சிறுமியின் தாய், ராஜையன் ஆகிய 2 பேர் மீதும் போக்சோ பிரிவில் போலீசார் வழக்குப்பதிந்து 2 பேரையும் கைது செய்தனர். .