சென்னையில் மேலும் ஒரு அதிர்ச்சி சம்பவம்! பணத்திற்காக பெற்ற மகளை பாலியல் தொழிலில் ஈடுப்படுத்திய தாய் ​​​​​​​

 
rape rape

சென்னையில் பணத்திற்காக பெற்ற மகளையே நாசமாக்கிய தாய், தந்தையரை போக்சோ சட்டத்தில் கைது செய்த போலீசார் விசாரணை மேற்கொண்டுவருகின்றனர்.

rape

தமிழகத்தில் சிறார் ஆபாச படங்கள் வைத்திருப்பவர்கள், பிறரிடம் பகிர்ந்து கொள்பவர்கள், சமூக வலைத்தளங்களில் பதிவேற்றம் செய்பவர்களை பிடிக்க போலீசார் தீவிர நடவடிக்கை எடுத்து வருகின்றனர். சமீப காலமாக சமூக வலைத்தளங்கள் மூலமாக அதிகமாக சிறார் ஆபாசப்படங்கள் பகிரப்பட்டு குழந்தைகள் மீதான கொடுங்குற்றசெயல்களுக்கு காரணமாக அமைவதாகவும் அதற்கு எதிரான நடவடிக்கையை தீவிரப்படுத்தி வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் மைலாப்பூர் காவல்நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதியில் ஒருவர் செல்போனில் சிறார் ஆபாச வீடியோக்களை வைத்து இருப்பதாகவும் அவற்றை விற்பனை செய்வதாகவும் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன் அடிப்படையில் உயர் அதிகாரிகள் உத்தரவின் படி தனிப்படை போலீசார் அந்த நபரை பிடித்து அவரது செல்போனை ஆய்வு செய்து அதிர்ச்சி அடைந்துள்ளனர். அதில் ஏராளமான சிறார்களின் ஆபாச வீடியோக்கள் இருந்துள்ளனர். மேலும் வீடியோக்கள் பல செல்போனில் பதிவிடப்பட்டதாக இருந்துள்ளது. அது குறித்து விசாரித்த போலீசாருக்கு மேலும் அதிர்ச்சி காத்திருந்துள்ளது.

ஆபாச படம்

தனது 14 வயது மகளையே பாலியல் தொழிலுக்கு அனுப்பியும், ஆபாசமாக வீடியோ பதிவு செய்து வைத்து இருந்ததும் அவற்றை சமூக வலைத்தளங்களில் பணத்திற்காக விற்பனை செய்து வந்ததும் தெரியவந்துள்ளது. அவனது செல்போனில் இருந்து யார்? யாருக்கெல்லாம் வீடியோ பகிரப்பட்டுள்ளது. சிறார் வீடியோக்களை பார்த்தவர்கள் யார்? மேலும் அந்த வீடியோக்களில் உள்ள குழந்தைகள் யார்? சிறார்களை வன்கொடுமை செய்தவர்கள் யார் என்ற பட்டியலை சேகரிக்கும் பணியில் போலீசார் ஈடுப்பட்டுள்ளனர்.  மேலும் இச்செயலுக்கு அவரது மனைவியும் உடந்தையாக இருந்தாகவும் அதனால் அவரும் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் கோட்டூர்புரம் அனைத்து மகளிர் போலீசார் தெரிவித்துள்ளனர். 

கோட்டூர்புரம் அனைத்து மகளிர் போலீசார் போக்சோ , தகவல் தொழில் நுட்ப சட்டம் உள்ளீட்ட பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து தம்பதியினர் இருவரையும் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் சிறார் வீடியோக்களை பார்த்தவர்கள், பகிர்ந்தவர்கள், பதிவிறக்கம் செய்தவர்களையும் கண்டறிந்து கைது செய்ய உள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.  ஏற்கனவே கோட்டூர்புரம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் துன்புறுத்தல் விவவாரம்,  ஐஐடி மாணவி பாலியல் சீண்டல் விவகாரம் வழக்குகள் உள்ள நிலையில் தற்போது சிறார் ஆபாச வீடியோ விவகாரமும் பெரும் பரப்பரப்பை ஏற்படுத்தியுள்ளது.