"மருந்து கேட்ட பெண்ணை மறைவான இடத்தில் வைத்து .."பக்கத்து வீட்டு வாலிபரால் பெண்ணுக்கு நேர்ந்த விபரீதம்

 
rape

உடல்நிலை சரியில்லாத தனது தாய்க்கு  ,மருந்து கேட்ட பெண்ணை பக்கத்து வீட்டு வாலிபர் பலாத்காரம் செய்தார் 

gang rape
டெல்லி பாண்டவ் நகர் பகுதியில் வசிக்கும் ஒரு 16 வயதான பெண் தன் பெற்றோருடன் வசித்து வந்தார் .அந்த பெண்ணின் தாய்க்கு கடந்த ஜனவரி 22 ம் தேதி திடீரென்று உடல் நிலை சரியில்லாமல் போனது .அப்போது அந்த பெண்ணின் தந்தை அலுவல் விஷயமாக வெளியூர் சென்று விட்டார் .அதனால் அந்த பெண்ணுக்கு தனியாக என்ன செய்வதென்று தெரியவில்லை .அதனால் பக்கத்து வீட்டில் வசித்த 22 வயதான வாலிபர் அருண் என்பவரிடம் தன் தாய்க்கு உடல்நிலை சரியில்லை என்று கூறி  அதற்கு ,மருந்து கேட்டார் .
அதை கேட்ட அந்த அருண் அந்த  சந்தர்ப்பத்தை பயன்படுத்தி அவரை பலாத்காரம் செய்ய திட்டமிட்டார் .அதனால் அந்த பெண்ணை தன்னோடு வந்தால் மருந்து வாங்கித்தருகிறேன் என்று  கூறி ,அந்தஇரவு நேரத்தில் ஒரு தனிமையான இடத்திற்கு கூட்டி சென்றார் .பின்னர் அங்கு வைத்து அந்த பெண்ணை பலாத்காரம் செய்து விட்டு ஓடிவிட்டார் .
அதன் பிறகு அந்த பெண் அங்கிருந்து தப்பி வந்து,பக்கத்து வீட்டு அருண் மூலம்  தனக்கு நேர்ந்த கொடுமை பற்றி அங்கிருந்தவர்க்ளிடம் கூறினார் .அதை கேட்ட அவர்கள்  அந்த அருண் மீது அங்குள்ள போலீசில் புகார் கொடுத்தனர் .போலீசார் அந்த பெண்ணை மருத்துவ பரிசோதனைக்கு அனுப்பி விட்டு ,அந்த வாலிபரை  தேடி வருகின்றனர்