எனக்கு கிடைக்காத நீ யாருக்கும் கிடைக்கக் கூடாது - மாணவிக்கு சரமாரி கத்திக்குத்து

 
st

எனக்கு கிடைக்காத நீ யாருக்கும் கிடைக்கக்கூடாது என்று ஆவேசமாக சத்தம் போட்டுக் கொண்டே சரமாரியாக கத்தியால் குத்தி இருக்கிறார் அந்த இளைஞர். ஒரு தலை காதலால் பிளஸ் டூ மாணவிக்கு இந்த கதி ஏற்பட்டிருக்கிறது.

 தூத்துக்குடி மாவட்டத்தில் ஸ்ரீ வைகுண்டம் தாலுகாவில் செக்காரக்குடி பகுதியைச் சேர்ந்தவர் கருப்பசாமி.  இவரது மகள் தங்கமாரி.   17 வயதான இந்த சிறுமி அரசு பள்ளியில் பிளஸ் டூ படித்து வருகிறார்.

so

தற்போது இவர் தேர்வு எழுதி வந்திருக்கிறார்.   நேற்று இவர் கடைசி தாள் தேர்வு எழுதிவிட்டு பள்ளியை விட்டு வெளியே வந்திருக்கிறார்.  அப்போது சோலை என்ற 22 வயது இளைஞர் அங்கே நின்றிருக்கிறார் . அவர் தங்கமாரி இடம் சென்று நான் உன்னை காதலிக்கிறேன். ஆனால் நீ எதுவும் சொல்லாமல் இருக்கிறாய்.  எனக்கு கிடைக்காத நீ யாருக்கும் கிடைக்கக்கூடாது என ஆத்திரத்துடன் ஆவேசமாக சத்தம் போட்டுக்கொண்டு தான் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து மாணவியின் தலை, கழுத்தில் சரமாரியாக கத்தியால் குத்தி  இருக்கிறார்.  இதில் ரத்த வெள்ளத்தில் கீழே சரிந்து மாணவி துடி துடித்துக் கொண்டிருந்தார். 

 சக மாணவ , மாணவியர்கள் , ஆசிரியர்கள் அந்த மாணவியை மீட்டு தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் கொண்டு சென்றனர்.  அங்கு மாணவி தீவிர சிகிச்சை பெற்று வருகிறார் .  சம்பவம் குறித்து அறிந்த தட்டப்பாறை போலீசார் நேரில் வந்து விசாரணை நடத்தி இளைஞர் சோலை மீது வழக்குப்பதிவு செய்து  அவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

 ஒரு தலை காதலால் அந்த இளைஞர் இந்த பயங்கர செயலை செய்தது தெரிய வந்திருக்கிறது.