காருக்குள் சடலமாக கிடந்த வட மாநில வாலிபர்- குன்றத்தூர் பயங்கரம்

 
ச்

காருக்குள் டிரைவர் சீட்டில் உட்கார்ந்த நிலையில் ஒரு வாலிபர் சடலம் இருந்திருக்கிறது.  போலீசார் விசாரணையில் உயிரிழந்த அந்த வாலிபர் வட மாநிலத்தைச் சேர்ந்தவர் என்பது தெரிய வந்திருக்கிறது . கொலை செய்யப்பட்டாரா என்ற கோணத்தில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

 சென்னைக்கு அருகே உள்ள குன்றத்தூர் அடுத்த நத்தம் பகுதியில் சேர்ந்தவர் கோபிநாத்.   சொந்தமாக கம்பெனி நடத்தி வருபவர் .  மூன்று நாட்களுக்கு முன்பாக தனது காரை வீட்டில் வெளியே நிறுத்திவிட்டு காரை சுற்றிலும் கவர் போட்டு மூடி இருந்திருக்கிறார் .  நேற்று காரில் பார்க்கிங் மின்விளக்கு எரிந்து கொண்டே இருந்திருக்கிறது.

ச

 இதை பார்த்ததும் அதிர்ச்சி அடைந்த கோபிநாத் காரின் மீது மூடி இருந்த கவரை எடுத்துப் பார்க்கும் போது அதிர்ச்சி அடைந்திருக்கிறார்.   காருக்குள் டிரைவர் இருக்கையில் சீட் பெல்ட் அணிந்தபடி வாலிபர் ஒருவரின் சடலம் இருந்திருக்கிறது.   உடனே குன்றத்தூர் போலீசாருக்கு தகவல் சொல்ல போலீசார்  வந்து உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர்.

 30 வயது உடைய அந்த வாலிபர் வட மாநிலத்தைச் சேர்ந்தவர் என்பது தெரிய வந்திருக்கிறது .   அந்த வாலிபர் யார்? எப்படி கொலை செய்யப்பட்டார் ?காரை நிறுத்தி மூன்று நாட்கள் ஆனதால் கார் முழுவதும் மூடப்பட்டிருந்த நிலையில் அந்த வாலிபர் காருக்குள் எப்படி சென்றார்.

 காருக்குள் சென்றதும் அவர் உயிரிழந்தாரா?  இல்லை வேறு எங்கேயும் அந்த வாலிபரை கொலை செய்து இந்த காருக்குள் உட்கார வைத்து விட்டுக் கொண்டிருக்கிறார்களா? என போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.   காருக்குள் இருந்த கண்ணாடி சேதமடைந்து இருப்பதாலும் சீட் பெல்ட் முறையாக அந்த வாலிபர் அணியாமல் இருந்ததாலும் போலீசாருக்கு பெரும் சந்தேகம் ஏற்பட்டு இருக்கிறது. 

 காருக்குள் வட மாநில  வாலிபரின் சடலம் மீட்கப்பட்டுள்ளதால் குன்றத்தூர் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.