"எய்ட்ஸ் இருக்கு எட்டவே இருங்க.' - நர்ஸ் செஞ்ச வேலைய பாருங்க
ஒரு கர்ப்பிணி பெண் பிரசவத்துக்கு லஞ்சம் தராததால், சில நர்ஸுகள் அந்த பெண்ணுக்கும் ,குழந்தைக்கும் எய்ட்ஸ் இருப்பதாக புரளி கிளப்பி விட்டனர்
ஆந்திராவில் கடப்பா மாவட்டத்தின் பொதட்டூரைச் சேர்ந்த 25 வயது கர்ப்பிணி, பிப்., 27ல் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அந்த பெண்ணுக்கு பிரசவம் பார்க்க அந்த ஹாஸ்பிடலில் இருந்த சில நர்ஸுகள் 2000 ரூபாய் லஞ்சம் கேட்டனர் .ஆனால் அந்த பெண்ணிடம் பணமில்லாததால் அவர் பணம் தர மறுத்துள்ளார் .இந்நிலையில் அந்த பெண்ணுக்கு நேற்று குழந்தை பிறந்தது .அதன் பின்னரும் அந்த பெண் லஞ்சம் கொடுக்காததால் அந்த நர்ஸுகள் அந்த பெண்ணுக்கும், குழந்தைக்கும் எய்ட்ஸ் இருப்பதாகவும் ,யாரும் அருகே செல்லவேண்டாம் என்று வதந்தி பரப்பினர் .
அதன் பினர் அந்த பெண்ணின் உறவினர்கள் எய்ட்ஸ் சர்டிபிகேட் கேட்டதற்கு அவர்கள் தர மறுத்ததால் அந்த உறவினர்கள் போராட்டம் நடத்தினர் ,அப்போது அந்த நர்ஸுகள் லஞ்சம் தரவில்லையென்பதற்காக புரளி சொன்னோம் என்று கூறினர் .பின்னர் அந்த நர்ஸுகள் மீது பொலிஸில் புகாராலிக்கப்பட்டு அவர்கள் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடக்கிறது.