"உனக்கு ட்ரான்ஸ்பர் வேணும்னா, உன் மனைவி வேணும்" -ஊழியரிடம் டீல் பேசிய அதிகாரி -அடுத்து என்னாச்சி தெரியுமா ?

 
rape


ட்ரான்ஸ்பர் கேட்ட ஊழியரிடம் அவரின் மனைவியை கேட்ட அதிகாரியை போலீஸ் கைது செய்தது 

police officer PTI
 உத்தரபிரதேச மாநிலத்தில் லக்கிம்பூர் கெரியில்  உள்ள  உ .பி. மின் வாரியத்தில் 45 வயதுடைய கோகுல் பிரசாத் என்பவர் லைன் மேனாக பணிபுரிந்து வந்தார் .அவருக்கு அந்த இடத்திலிருந்து அவரின் வீட்டுக்கருகே உள்ள ஒரு ஆபீஸிற்கு ட்ரான்ஸ்பர் கேட்டு கடந்த மூன்று வருடமாக போராடி வந்தார் .இதனால் தன்னுடைய  உயரதிகாரிகள் மற்றும் கிளார்க் ஆகியோரிடம் பல முறை கோரிக்கை வைத்தும் அவர்கள் செவி சாய்க்கவில்லை 
இந்நிலையில் ஜூனியர் இன்ஜினியர் நாகேந்திர குமார் என்பவரிடம் சென்று சில நாள் முன்பு மீண்டும் இந்த ட்ரான்ஸ்பர் பற்றி கேட்டார் .அப்போது அந்த அதிகாரி அவரிடம் 'ட்ரான்ஸ்பர் வேண்டுமென்றால் உன் மனைவியை ஒரு நாள் இரவு என்னோடு அனுப்ப முடியுமா ?'என்று கேட்டுள்ளார் .அதை கேட்டு மிகவும் மன உலைச்சலான அந்த கோகுல் உடனே  கெரோசினை  எடுத்து கொண்டு வந்து, அந்த அதிகாரியின் முன்பு தீ குளித்து தற்கொலை செய்து கொண்டார் .பின்னர் அவர் இறக்கும் தருவாயில் கொடுத்த மரண வாக்கு மூலத்தில் தன்னிடம் ட்ரான்ஸ்பருக்கு அவரின் மனைவியை அனுப்ப சொன்ன அந்த அதிகாரி நாகேந்திர குமார் பற்றி கூறினார் .இதனால் போலிஸ் அந்த அதிகாரி மற்றும் கிளார்க் ஆகியோர் மீது வழக்கு பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்