கள்ளக்காதலனுடன் அவரது மகனையும் வீட்டிற்கு அழைத்த வேலைக்காரி கைது

 
m

 கள்ளக்காதலன் அவரது மகனுடன் சேர்ந்து மூதாட்டியை கொலை செய்திருக்கிறார் வேலைக்காரி . நகை பணத்திற்காக இந்த கொலையைச் செய்திருக்கிறார்கள்.

மகாராஷ்டிரா மாநிலத்தில் மலாடு கொல்லம் நியூ லைப் பகுதியில் குடியிருப்பு கட்டிடத்தில் வசித்து வந்தவர் மேரி செலின்.  69 வயதான இந்த மூதாட்டி தனது 26 வயது பேரனுடன் வசித்து வந்திருக்கிறார்.  சம்பவத்தன்று பேரன் வேலைக்கு சென்று இருக்கிறார்.  வேலைக்கு சென்ற பேரன் பாட்டிக்கு வழக்கம் போல் போன் செய்திருக்கிறார்.  பலமுறை போன் செய்து பாட்டி போனை எடுக்கவில்லை .

இதனால் சந்தேகம் அடைந்த பேரன்,  பக்கத்து வீட்டுக்கு போன் செய்து பாட்டியை சென்று பார்த்து வருமாறு சொல்லி இருக்கிறார்.  இதனால் பக்கத்து வீட்டுக்காரர் சென்று கதவை தட்டி இருக்கிறார்.  வெகு நேரம் கதவை தட்டியும் திறக்கவில்லை. உடனே மாற்று சாவி மூலம் பக்கத்து வீட்டுக்காரர் கதவை திறந்து உள்ளே சென்று பார்த்து இருக்கிறார்.  அங்கே மூதாட்டி மேரி குளியலறையில் மயங்கிய நிலையில் கடந்து இருக்கிறார்.  அவரின் தலை வாளி தண்ணீர் மூழ்கியபடி இருந்திருக்கிறது. 

mu
உடனே அருகில் இருந்த டாக்டர் ஒருவரை அழைத்து வந்து பரிசோதித்த போது மூதாட்டி உயிரிழந்தது தெரிய வந்திருக்கிறது.   தகவல் அறிந்ததும் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து மூதாட்டியின் உடலை பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்திருக்கின்றனர்.   மூதாட்டி குளியலறையில் தவறி விழுந்து உயிரிழந்திருக்கலாம் என்று அவரது குடும்பத்தினரும் போலீசாரும் முதலில் நினைத்தனர்.  ஆனால் வீட்டில் இருந்த செல்போன்கள்,  தங்கச் சங்கிலிகள் மாயமாகி இருந்தது சந்தேகத்தை ஏற்படுத்தி இருக்கிறது. 

 இதை அடுத்து நடந்த விசாரணையில் மூதாட்டியின் வீட்டிலிருந்து 20 ஆண்டுகளுக்கு மேலாக வேலை பார்த்து வந்த பெண் அவரது கள்ளக்காதலன் அவரின் மகன் மூன்று பேரும் சேர்ந்துதான் இந்த கொலையை செய்தது தெரிய வந்திருக்கிறது .  மூதாட்டியின் வீட்டில் வேலை பார்த்து 42 வயதான சப்னம் என்கிற பெண்,  மூதாட்டியின் மகள்கள் இரண்டு பேர் வெளிநாட்டில் இருப்பதால் வீட்டில் அதிக அளவு பணம் நகை இருக்கும் என்று நினைத்திருக்கிறார்.  இதனால் மூதாட்டியை கொன்று விட்டு வீட்டில் உள்ள நகை பணத்தை கொள்ளையடிக்க திட்டமிட்டு இருக்கிறார்.

 சம்பவத்தன்று கள்ளக்காதலுடன் முகமது உமர் என்கிற 71 வயது நபரும் அவரின் மகனான 21 வயது இளைஞரையும் மூதாட்டியின் வீட்டிற்கு வரவழைத்து இருக்கிறார் முகமது உமர் .  மூதாட்டியை தலையணையால் முகத்தில் அழுத்தி மூச்சு திணறடித்து கொலை செய்திருக்கிறார் முகமது உமர்.  பின்னர் உடலை தூக்கிச் சென்று குளியலறையில் போட்டு உள்ளார்கள்.  ஆனால் திட்டமிட்டபடி அவர்கள் மூதாட்டி வீட்டின் பீரோ லாக்கரை உடைக்க முடியவில்லை.  அதனால் வெளியில் இருந்த இரண்டு செல்போன்கள் தங்கச் சங்கிலியை மட்டும் கொள்ளையடித்துச் சென்றது தெரிய வந்திருக்கிறது.  சம்பவம் குறித்து தெரிந்ததும் மூன்று பேர் மீதும் கொலை கொள்ளை வழக்கு பதிவு செய்துள்ளனர்.