"மூணு பேரால் , மூணு முறை முதலிரவு நடத்த வச்சி .." ஒரு மைனர் பெண்ணுக்கு பெற்றோரால் நேர்ந்த கொடுமை
பணத்துக்காக மைனர் சிறுமிக்கு நான்காவது திருமணம் செய்து வைக்க முயன்ற புகாரில், அவரது தாய் உட்பட பல பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்துஉள்ளனர்.
மஹாராஷ்டிராவில் அவுரங்காபாத் மாவட்டம் போக்ரடன் பகுதியை சேர்ந்த ஒரு 16 வயதான மைனர் பெண் தனது தாய் மற்றும் சகோதரர்களுடன் வசித்து வந்தார் .அந்த வீட்டில் உள்ளோருக்கு போதிய வருமானம் இல்லை .அதனால் அவர்கள் அந்த வீட்டு மைனர் பெண்ணை வைத்து பணம் ஈட்ட ஒரு திட்டம் தீட்டினர் .அதனால் அவர்கள் அந்த பெண்ணுக்கு அதே ஊரை சேர்ந்த ஒருவரிடம் லட்சக்கணக்கில் பணம் வாங்கிக்கொண்டு திருமணம் செய்து வைத்தனர் .பின்னர் அந்த பெண் அவரிடமிருந்து ஒரே மாசத்தில் பிரிந்து வந்து விட்டார் .அதன் பிறகு அவர்கள் அந்த பெண்ணை மீண்டும் இன்னொருவரிடம் பணம் வாங்கிகொண்டு திருமணம் செய்து வைத்தனர் .அவரிடமிருந்தும் அந்த பெண் சில மாதங்களில் வந்து விட்டார் .அதன் பிறகு அவர்கள் மூன்றாவதாக இன்னொருவரிடம் பணம் வாங்கிக்கொண்டு திருமணம் செய்தனர் .ஆனால் அவரிடமிருந்தும் அந்த பெண் பிரிந்து வந்தார் .இதனால் அவர்கள் அந்த பெண்ணை நாலாவதாக ஒருவருக்கு திருமணம் செய்ய பணம் வாங்கி ஏற்பட்டு செய்தனர் .இதை தெரிந்து கொண்ட அந்த பெண் அங்குள்ள போலீசில், தனக்கு மூன்று திருமணத்திலும் மாப்பிள்ளை வீட்டாரிடமிருந்து லட்சக்கணக்கில் தன் தாயும், சகோதரர்களும் பணம் வாங்கி உள்ளதாக புகார் தந்தார்
.அந்த புகாரின் பேரில் சிறுமியின் தாய், சகோதரர்கள், அவரது மூன்று கணவர்கள் உட்பட பல பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்து அவர்களை தேடி வருகின்றனர்.