பிளஸ் 2 மாணவி கர்ப்பம்! காரணமான கணித ஆசிரியர்... பள்ளியில் அரங்கேறும் கொடுமை

 
rape rape

தூத்துக்குடி மாவட்டம் கொங்கராயகுறிச்சியில் உள்ள தனியார் பள்ளி மாணவி கர்ப்பமான சம்பவத்தில் அதே பள்ளியில் வேலை பார்த்த ஆசிரியரை  போக்சோ சட்டத்தில் கைது செய்து அனைத்து மகளிர் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

rape

தூத்துக்குடி மாவட்டம் கொங்கராயகுறிச்சியில் உள்ள தனியார் மெட்ரிகுலேசன் பள்ளியில் மணிகண்டன் என்பவர் கணித ஆசிரியராக வேலைபார்த்து வந்தார். இவர் கடந்த பிப்ரவரி மாதம் அதே பள்ளியில் படித்த பிளஸ்-1 மாணவி ஒருவரிடம் தவறாக நடக்க முயன்றதால் அவரை பள்ளி நிர்வாகம் டிஸ்மிஸ் செய்தது. இந்நிலையில் அந்த  மாணவி தற்போது பன்னிரண்டாம் வகுப்பு படித்து வரும் நிலையில், ஆஸ்பத்திரிக்கு பரிசோதனைக்கு சென்றபோது அவர் கர்ப்பமாக இருப்பது மருத்துவ பரிசோதனையில் தெரியவந்தது. தொடர்ந்து விசாரித்தபோது ஆசிரியர் மணிகண்டன் தான் மாணவியின் கர்ப்பத்திற்கு காரணம் என்பது தெரியவந்ததாக கூறப்படுகிறது.

இதையடுத்து மாணவியின் பெற்றோர் ஸ்ரீவைகுண்டம் மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர். அதன்பேரில் போலீசார் விசாரணை நடத்தி மணிகண்டன் மீது போக்சோ சட்டத்தின்கீழ் வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர். மேலும் பாதிக்கப்பட்ட மாணவியை நெல்லை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்த்தனர். தொடர்ந்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்நிலையில், மாணவியின் உறவினர்கள் மற்றும் கொங்கராயகுறிச்சி ஜமாத் நிர்வாகிகள் பள்ளிவாசலில் இருந்து ஊர்வலமாக புறப்பட்டு தனியார் பள்ளியை முற்றுகையிட்டு திடீர் போராட்டத்தில் ஈடுபட்டனர். இது குறித்து தகவல் அறிந்த ஸ்ரீவைகுண்டம் தாசில்தார் ரத்ன சங்கர் மற்றும் இன்ஸ்பெக்டர் பத்மநாபபிள்ளை ஆகியோர்  போராட்டத்தில் ஈடுபட்டவர்களோடு பேச்சுவார்த்தையில் நடத்தினர். அப்போது, பள்ளி நிர்வாகத்தின் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என போராட்ட குழுவினர் கோரிக்கை விடுத்தனர். இதுகுறித்து உரிய விசாரணை செய்து நடவடிக்கை எடுக்கப்படும் என தாசில்தார் ரத்தனசங்கர் உறுதி அளித்தார். இதைத் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கலைந்து சென்றனர்.