"ஏம்மா இதுக்கெல்லாமா தற்கொலை பண்ணுவீங்க" -ப்ளஸ் டூ மாணவியின் பரிதாப கதை.

 
murder


 
ஹாஸ்டல் ரூமை வார்டன் சுத்தப்படுத்த சொன்னதால் கோவப்பட்ட ஒரு ப்ளஸ் டூ மாணவி தற்கொலை செய்து கொண்டார் 

death

தமிழகத்தின் அரியலூர் மாவட்டம் திருமானூர் ஒன்றியம் வடுகர்பாளையம் பகுதியை சேர்ந்த 17 வயது லாவண்யா என்ற மாணவி ,தஞ்சை மாவட்டம்  மைக்கேல்பட்டியில் உள்ள ஒரு மேல்நிலைப்பள்ளியில் பிளஸ்-2 படித்து வந்தார். மேலும் அங்குள்ள பள்ளி விடுதியில் தங்கி இருந்தார். 

இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு அந்த லாவண்யா ஹாஸ்டலில் இருக்குபோது ,அந்த ஹாஸ்ட்டல் வார்டன் ஒவ்வொரு ரூமாக செக் பண்ணிக்கொண்டே வந்தார் .அப்போது லாவண்யாவின் ரூமை பார்த்த அவருக்கு கோபம் வந்துள்ளது .அதனால் அந்த ரூமை சுத்தப்படுத்துமாறு கோபமாக சத்தம் போட்டார் .அதனால் அந்த மாணவி மனம் உடைந்து விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்று ,மயங்கி கிடந்தார் .உடனே அவரின் அந்த கோலத்தை பார்த்த மற்ற மாணவிகள் அவரை அருகிலுள்ள ஹாஸ்ப்பிட்டலுக்கு தூக்கி சென்றனர் .பிறகு போலீசுக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது 

பிறகு அந்த மாணவியிடம் போலீசார்  விசாரணை நடத்திய போது, விடுதியில் தன்னை வேலை செய்யுமாறு கூறியதால் தான் மனம் உடைந்து பூச்சி மருந்தை குடித்து விட்டதாக மாணவி கூறினார். பின்னர் தஞ்சை மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்த மாணவி லாவண்யா சிகிச்சை பலனின்றி நேற்று மாலை பரிதாபமாக உயிரிழந்தார்.
இதனைத்தொடர்ந்து  போலீசார் வழக்குப்பதிவு செய்து பள்ளி விடுதி வார்டன் சகாயமேரியை  கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.