"ஊ சொல்றியா மாமா ,பாட்டு டான்ஸ் மாஸ்டர் உல்லாசமா இருக்க சொன்னார்" பெண் பாலியல் புகார் - குற்றப்பத்திரிகை தாக்கல்
பிரபலமான 'ஊ சொல்றியா.." பாடலின் நடன இயக்குனர் கணேஷ் ஆச்சார்யா மீது ஒரு பெண் பாலியல் புகார் கூறிய வழக்கில், குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
சமீபத்தில் பிரபலமான பாடலான ஊ சொல்றியா பாடலின் டான்ஸ் மாஸ்ட்டரும் ,பாலிவுட்டின் பிரபல நடன இயக்குனர் 50 வயதான கணேஷ் ஆச்சார்யா, ஹிந்தி மட்டுமின்றி, தமிழ், தெலுங்கு உள்ளிட்ட பல மொழி பாடல்களுக்கு, நடனம் அமைத்துள்ளார். பல விருதுகளை பெற்ற இவர், சமீபத்தில் தெலுங்கு, தமிழ் உள்ளிட்ட பல மொழிகளில் வெளியான புஷ்பா திரைப்படத்தில் இடம்பெற்று பிரபலமான, 'ஊ சொல்றியா... மாமா...' என்ற பாடலுக்கும் நடனம் அமைத்தார்.இந்த பாடல் பட்டி தொட்டியெங்கும் பிரபலமானது .இந்த பாடலில் சமந்தாவின் கவர்ச்சி நடனம் பல வாலிபர்களை நடனமாட வைத்தது
இந்நிலையில் அவர் மீது கடந்த 2020ல், நடனக் குழுவில் இருந்த ஒரு பெண்ணை, டான்ஸ் மாஸ்ட்டர் கணேசும், அவரது உதவியாளரும், பாலியல் ரீதியாக துன்புறுத்தியதாக புகார் எழுந்தது. இதுகுறித்து, அந்தப் பெண் அளித்த புகாரில், மும்பை போலீசார் வழக்குப் பதிவு செய்தனர். ஆனால், இந்தக் குற்றச்சாட்டை கணேஷ் மறுத்து வந்தார் . இந்நிலையில், இந்த வழக்கில், மும்பை போலீசார் நேற்று குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தனர்.அதனால் இனி வழக்கு வேகம் பிடித்து விசாரணை நடைபெறும் என்று தெரிகிறது .