"என்னை கர்ப்பமாக்கிட்டு காணாமப்போயிட்டியே "-ஏமாற்றிய காதலனால் ஒரு காதலி செஞ்ச துணிச்சலான காரியம் .
காதலி கர்ப்பமானது தெரிந்ததும் , காதலன் தலைமறைவானதால் , குடும்பத்துடன் காதலன் வீட்டில் காதலி குடியேறினார் .
திருவண்ணாமலை மாவட்டம் கண்ணமங்கலம் பகுதியில் உள்ள கிராமத்தை சேர்ந்த 19 வயது கல்லூரி மாணவி ஒருவர் பேருந்தில் கல்லூரிக்கு சென்று வந்துள்ளார். இந்த நிலையில் ஆரணி பகுதியை சேர்ந்த 21 வயதான மதன்குமாரும் வேறு ஒரு கல்லூரியில் படித்து வந்துள்ளார்.அவரும் அந்த பெண்ணும் தினமும் ஒரே பஸ்ஸில் கல்லூரிக்கு சென்று வந்ததால் இருவருக்கும் காதல் மலர்ந்தது .அதன் பிறகு அந்த பெண்ணிடம் அந்த மதன்குமார் பலமுறை உறவு கொண்டதால் அந்த பெண் கர்ப்பமானார் .
அந்த காதலி கரப்பமானது தெரிந்ததும் ,அந்த மதன்குமார் தலை மறைவாகிவிட்டார் .அதனால் அதிச்சியடைந்த அந்த காதலி அவரை எங்கு தேடியும் கிடைக்காததில் மனம் நொந்து, இது பற்றி தன் பெற்றோரிடம் கூறினார் .அதை கேட்டு அதிர்ச்சியடைந்த அந்த பெண்ணின் பெற்றோர் அந்த மகளை அழைத்து கொண்டு அந்த காதலன் வீட்டுக்கு சென்று தேடி பார்த்தனர் .அப்போது அவரின் வீடு பூட்டியிருந்ததால் ,அந்த வீட்டின் பூட்டை உடைத்து அந்த வீட்டுக்குள் குடியேறினர் .அதனால் அக்கம் பக்கத்தினர் போலீசில் தகவல் கூறி ,அங்கு போலீசை அழைத்து வந்தனர் .அப்போது அவர்கள் அந்த காதலன் துரோகத்தை போலீசிடம் கூறியதும் ,அவர்கள் அந்த காதலனுடன் சேர்த்து வைக்க அவரை தேடி வருகின்றனர் .