"அதுக்கு ஓகே சொன்னாதான் ,நடிக்க ஓகே சொல்வோம்"-டிவி நடிகையிடம் தயாரிப்பு நிர்வாகி பேசிய டீலிங்
டிவி தொடரில் நடிக்க ஒரு நடிகைக்கு பாலியல் தொல்லை கொடுத்த ஒரு தயாரிப்பு நிர்வாகியை போலீஸ் கைது செய்தது
மகாராஷ்டிரா மாநிலத்தில் மும்பையில் பல மராத்தி மொழி டிவி தொடர்களின் படப்பிடிப்பு நடக்கிறது. .அங்கு ஒளிபரப்பாகும் ஒரு பிரபலமான மராத்தி டிவி தொடர் தயாரிக்கும் நிறுவனத்தில், புதிய டிவி தொடர் தயாரிக்கும் பணி தொடங்கியது .அந்த தொடரில் நடிக்க பல நடிகைகளை தேர்வு செய்து வந்தனர் .
அந்த நிறுவனத்தில் லோகண்டே என்ற தயாரிப்பு நிர்வாகி இதற்கான பணிகளை மேற்கொண்டு பல நடிக நடிகையரை ஒப்பந்தம் செய்து வந்தார் .
அப்போது அந்த லோகண்டே ஒரு 32 வயதான மராத்தி நடிகையை அந்த தொடரில் நடிக்க ஒப்பந்தம் செய்ய போனார் .அப்போது அந்த நடிகையிடம் அவர் பாலியல் டீலிங் பேசியுள்ளார் .இந்த தொடரில் நடிக்க தன்னை அட்ஜெஸ்ட் செய்ய வேண்டும் என்றும் ,இல்லையென்றால் இந்த தொடரில் நடிக்க முடியாது என்றும் டீலிங் பேசியுள்ளார் .மேலும் அடிக்கடி அந்த நடிகைக்கு பாலியல் தொல்லை கொடுத்தார் .இதனால் பாதிக்கப்பட்ட அந்த நடிகை அந்த லோகண்டே மீது போலீசில் புகார் கொடுத்தார் .போலீசார் அவர் மீது வழக்கு பதிந்து லோகண்டேவை கடந்த புதன் கிழமை கைது செய்தனர் .