"பாவிகளா! பிணங்களை கூட விட்டு வைக்காமல் .."பிணங்களை பிளந்து - உக்ரைனில் ரஷ்ய ராணுவத்தின் அக்கிரமம்.
ரஷிய உக்ரைன் போரில் நாளுக்கு நாள் ரஷ்ய ராணுவத்தின் அக்கிரமம் தொடர்கிறது .பெண்கள் மற்றும் சிறுமிகளை பலாத்காரம் செய்தும் அப்பாவி மக்களை கொன்று குவித்தும் நாச படுத்தி வருகின்றனர் . உக்ரைன் தலைநகர் பகுதியில் இருந்து வெளியேறும் ரஷ்ய ராணுவம் , உக்ரேனிய ஆண், பெண் சடலங்களில் வெடிகுண்டை புதைத்துவிட்டு போயுள்ளது சர்வதேச அளவில் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதனால் உக்ரைன் பகுதியில் அதிக இழப்பை ஏற்படுத்த ரஷ்யராணுவம் திட்டமிட்டுள்ளது . அங்கு மீட்கப்பட்ட சடலங்கள் அனைத்தும் கைகள் கட்டப்பட்ட நிலையிலும், மிக அருகாமையில் வைத்தே துப்பாக்கியால் சுட்டு கொல்லப்பட்டுள்ளதும், கொடூரமான சித்திரவதைக்கு உட்படுத்தப்பட்டுள்ளதும் தெரியவந்துள்ளது.
மேலும் பிணங்களின் உடல்களை பிளந்து, வெடிகுண்டை நிரப்பிச் சென்றுள்ள காட்டுமிராண்டித்தனம் தற்போது சர்வதேச அளவில் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. ரஷ்ய வீரர்களின் படையெடுப்பில் ஹோஸ்டோமல் நகர மேயர் கொடூரமாக கொல்லப்பட்டதுடன், அவரது உடலிலும் வெடிகுண்டை புதைத்துள்ளனர்.
இந்நிலையில் உக்ரைன் தலைநகர் கீவ்வில் உள்ள ஒரு கிராமத்தில் கடந்த மாதம் 10ஆம் தேதி சாஷா என்ற 4 வயது சிறுவன் தனது பாட்டியுடன் படகில் ஏறி போரிலிருந்து தப்ப முயன்றிருக்கிறான்.பின்னர்
சாஷா எங்கேயாவது உயிருடன் இருப்பான் என அவன் பெற்றோர் உறுதியுடன் நம்பி கொண்டிருந்தனர். இந்த நிலையில் அவர்களின் நம்பிக்கை வீணாய் போயுள்ளது, அதன்படி ரஷ்ய படையினரால் சாஷாவும் அவன் பாட்டியும் சுட்டு கொல்லப்பட்ட நிலையில் சிறுவனின் சடலம் நேற்று கண்டெடுக்கப்பட்டுள்ளது.