"அறுபது வயது ஆயாக்களை கூட பலாத்காரம் செய்து ..' -உக்ரைன் போரில் உடலுறவுக்கு உக்கிரமாக அலையும் ரஷ்ய வீரர்கள்

 
war

உக்ரைன் போரில்  60 வயது கடந்த பெண்களை கூட ரஷ்ய வீரர்கள் சீரழித்து பின்னர் தூக்கில் தொங்கவிடுவதாக   பெண் எம்.பிக்கள் கதறியுள்ளனர் 

நாளுக்கு நாள் ரஷ்ய வீர்ரகளின் அட்டகாசம் உக்ரைனில் உக்கிரமாக இருக்கிறது .இது பற்றி உக்ரைனின் எதிர்க்கட்சியான ஹோலோஸ் கட்சியின் எம்.பியான லிசியா வெசிலின்கோ கூறுகையில்  , ரஷ்ய வீரர்கள் பல வயதான பெண்களை கூட கற்பழிப்பதாகவும் ,இதனால் அவர்கள்  தற்கொலை செய்து கொண்டுள்ளதாக கண்ணீருடன் தெரிவித்துள்ளார்.
பெரும்பாலான பெண்கள் முதலில் தங்கள் குழந்தைகளை  பத்திரமாக அனுப்பி வைத்துவிட்ட பின்னர், வீட்டிலிருந்து  வெளியேறும்போது ரஷ்யவீரர்களிடம் சிக்குவதாகவும், எம்.பியான லிசியா வெசிலின்கோ தெரிவித்துள்ளார்
பெரும்பாலான பெண்கள் பலாத்காரம் செய்யப்பட்ட பின்னர் கொல்லப்பட்டுள்ளதாகவும், சிலர் அந்த அவமானம் தாங்காமல் தற்கொலை செய்து கொண்டுள்ளதாகவும் ,மேலும் சிறுவர் சிறுமிகளையும் குறி வைத்து தாக்குதல் நடப்பதாகவும் அந்த எம்.பி. லிசியா வெசிலின்கோதெரிவித்துள்ளார்.
இதில் கொடுமை என்னவென்றால், பாதிக்கப்பட்ட பெண்கள் அல்லது குடும்பத்தினர் எவரும் இந்த கொடுமை பற்றி வெளிப்படையாக பேச முன்வரவில்லை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
போர்க்குற்றங்கள் தொடர்பான ஆதாரங்களுக்காக நாம் சேகரிக்கும் உண்மைகள் இவை என இன்னொரு உக்ரேனிய எம்.பி மரியா தெரிவித்துள்ளார்.

.