"டேய் ஸ்கூலுக்கு போகணும் விடுங்கடா " -படிக்கும் பெண்ணை நண்பர்களுக்கு விருந்தாக்கிய வாலிபர்
ஒரு மைனர் பெண்ணை காரில் கடத்தி வீட்டில் சிறைவைத்து கூட்டாக கற்பழித்த சம்பவம் நடந்துள்ளது.
கர்நாடக மாநிலம் தட்சிணகன்னடா மாவட்டம் பண்ட்வால் தாலுகா அம்டாடி கிராமம் அருகே கெம்புகுட்டே பகுதியைச் சேர்ந்த 17 வயது சிறுமி அங்குள்ள ஒரு பள்ளியில் ப்ளஸ் டூ படித்து வருகிறார் .அந்த பெண் தினமும் பள்ளிக்கூடம் போகும் போது அவருக்கு தெரிந்த ஒரு வாலிபர் அவரை நோட்டமிட்டு வந்துள்ளார் .இந்நிலையில் அந்த பெண் கடந்த வாரம் வழக்கம் போல பள்ளிக்கூடம் சென்ற போது ,அந்த வாலிபர் ஒரு காரை எடுத்துக்கொண்டு வந்து அவரின் அருகே நிறுத்தி, அதில் ஏறிக்கொள்ளுமாறு கட்டாயப்படுத்தினார் . அந்த பெண் அவர் தெரிந்தவர் என்பதால் அவரை நம்பி அந்த காரில் சென்றார் .
அதன் பிறகு அந்த நபர் அந்த பெண்ணை பள்ளிக்கூடம் கூட்டி போகாமல் ஒரு பழைய வீட்டிற்கு கூட்டி போனார் .அங்கு ஏற்க்கனவே அவரின் நான்கு நண்பர்கள் காத்திருந்தனர் .பிறகு அவர்கள் அனைவரும் அந்த பெண்ணை காரிலிருந்து தரதரவென இழுத்து கொண்டு வந்து அந்த வீட்டில் கட்டி வைத்து அடைத்தனர் .பிறகு அந்த பெண்ணை கூட்டிவந்த நபர், தான் முதலில் அந்த பெண்ணோடு உல்லாசமாக இருக்கிறேன் என்று கூறி மற்றவர்களை கதவை மூடிவிட்டு வெளியே இருக்க சொன்னார் .அதன் பின்னர் ஒவ்வொருவராக அந்த ஐந்து பெரும் அந்த பெண்ணை பலாத்காரம் செய்தனர் .
பிறகு அந்த பெண் அவர்களிடமிருது தப்பி வந்து அங்குள்ள காவல் நிலையத்தில் புகார் தந்தார் .போலீசார் வழக்கு பதிந்து அந்த ஐந்து பேரில் நால்வரை கைது செய்தனர் .மேலும் ஒருவரை தேடி வருகின்றனர்.