லாட்ஜில் ரகசிய கேமரா : புதுமண தம்பதியிடம் பணம் கேட்டு மிரட்டிய ஊழியர் கைது..

 
லாட்ஜில் ரகசிய கேமரா : புதுமண தம்பதியிடம் பணம் கேட்டு மிரட்டிய ஊழியர் கைது..


லாட்ஜ் அறையில்  ரகசிய கேமரா பொருத்தி, புதியதாக திருமணமான ஜோடியிடம் பணம் கேட்டு மிரட்டிய  ஊழியர் முனீர் கைது செய்யப்பட்டுள்ளார்.
 
கேரளாவின் கோழிக்கோடு பகுதியில் அமைந்துள்ள லாட்ஜ் ஒன்றில் ஊழியராக பணிபுரிந்து வருவபர் முனீர். இவர் தான் பணிபுரிந்துவரும் லாட்ஜின் அறையில் உள்ள, கொசு விரட்டும் கருவியில் ரகசிய கேமராவை  பொருத்தியதாக தெரிகிறது. இந்நிலையில் இந்த லாட்ஜில் புதிதாக திருமணமான ஜோடி அறையெடுத்து தங்கியுள்ளனர்.  இதனை அடுத்து தம்பதிகள் உல்லாசமாக இருந்ததை, ரகசிய கேமராவில் பதிவு செய்த முனீர், அந்த வீடியோவை  காண்பித்து புதுமண தம்பதியை பணம் கேட்டு மிரட்டியுள்ளார்.

கைது

இதனையடுத்து சாமர்த்தியமாக செயல்பட்ட தம்பதி, இதுகுறித்து காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளனர்.  பின்னர் போலீஸின் உதவியுடன், புதுமண தம்பதி பணம் தருவதாகக்கூறி முனீரை குறிப்பிட்ட இடத்திற்கு அழைத்துள்ளனர். பணம் பெறப்போகும் ஆசையில் வந்த முனீரை, அங்கு மறைந்திருந்த போலீஸார் கையும் களவுமாக பிடித்து கைது செய்தனர். மேலும் அவரிடம் நடத்திய விசாரணையில் இதேபோல் அந்த லாட்ஜில் தங்க வந்த பலரை, ரகசிய கேமராவில் வீடியோ எடுத்து பணம் பறித்து வந்தது தெரியவந்துள்ளது.