"அடக்கடவுளே !இதுவரை எத்தனாயிரம் பொம்பளைங்க குளிக்கறத படம் எடுத்தாங்களோ" -கோவில் குளியல் அறையில் கேமரா.

 
camera

 

கோவிலில் உள்ள பெண்கள் குளியல் அறையில் 3 ரகசிய கேமிராக்கள் கண்டெடுக்கப்பட்டது பலரை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது .

bath

தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே சித்தவநாயக்கன்பட்டி கிராமத்தில் அருள்மிகு ஸ்ரீ காமாக்ஷியம்மன் திருக்கோவில் உள்ளது. இந்த கோவிலுக்கு வரும் பெண் பக்தைகள் அங்குள்ள குளியலறையில் குளித்து விட்டு உடை மாற்றி விட்டு சாமி தரிசனம் செய்வார்கள் .தினமும் நூற்றுக்கணக்கான பெண்கள் அங்கு வருவார்கள் 
இந்நிலையில் கடந்த 17-ம் தேதி பௌர்ணமி தினத்தன்று கோவிலில் நடைபெற்ற சிறப்பு பூஜையில் கலந்து கொண்டு  தரிசனம் செய்து கொள்வதற்காக ஏராளமானோர் இக்கோவிலுக்கு வந்திருந்தனர். அச்சமயத்தில் இக்கோவிலுக்கு வந்த ஒரு  பெண் பக்தர் ஒருவர் குளிப்பதற்காக இக்கோவில் வளாகத்தில் உள்ள குளியலறைக்கு சென்றுள்ளார்.அப்போது அந்த குளியலறையில்  ஒரு கேமரா இருப்பதை பார்த்து அதிர்ச்சியடைந்து கோவில் நிர்வாகத்திடமும் ,பின்பு போலீசிலும் புகார்  கொடுத்தார் .உடனே போலீசார் அந்த இடத்திற்கு வந்து சோதனையிட்ட போது, அங்கு மூன்று கேமராக்கள் பல மாதங்களாக ஒளித்து வைத்து அங்கு வரும் பெண்களை படம் பிடிக்கப்பட்டது  கண்டுபிடிக்கப்பட்டது .
இக்கோவிலின் குளியலறையில் ரகசியமாக பொருத்தப்பட்டிருந்த கேமராக்களை பார்க்கும் போது இதன் மூலம் பெண்கள் குளிப்பதை பல மாதங்களாக தொடர்ந்து படம் எடுத்திருக்கக்கூடும் என்று கூறப்படுகிறது.