"கதவை மூடிவிட்டு ,கண்ட இடத்தில கை வைத்து .."டான்ஸ் டீச்சரை டார்ச்சர் செய்ததாக ஜாகீர் உசேன்.மீது புகார்
டான்ஸ் டீச்சரை அறைக்குள் அடைத்து பாலியல் தொல்லை கொடுத்ததாக நடன கலைஞர் ஜாகீர்உசேன் மீது புகார் எழுந்துள்ளது.
பிரபல பரதநாட்டியக் கலைஞர் ஜாகீர் உசேன், பல்வேறு கலை கலாச்சார நிகழ்ச்சிகளை அரங்கேற்றம் செய்து வருகிறார். இவர் மீது ஏற்கனவே சிவகங்கை மாவட்ட இசைப்பள்ளிக்கு ஆய்வுக்கு வந்த போது ஒரு ஆசிரியையிடம் அத்துமீறி நடந்து கொண்டதாக புகார் வந்தது . இந்நிலையில் சமீபத்தில் ஒரு இசை பள்ளி டீச்சர் அவர் மீது பாலியல் புகார் கூறியுள்ளார்
இதுதொடர்பாக பாதிக்கப்பட்ட இசை பள்ளி ஆசிரியை கலை பண்பாட்டு துறை இயக்குநரிடம் புகார் கூறியுள்ளார்
.அந்த புகாரில் கடந்த பிப்ரவரி 28 அன்று கலையியல் அறிவுரைஞர் ஜாகிர் உசேன் அவரின் பள்ளிக்கு ஆய்வுக்கு வந்தார். அப்போது அந்த பெண்ணை மட்டும் தலைமை ஆசிரியை அறைக்கு உள்ளே வர சொல்லி அழைத்து கதவை மூடினார்.அங்கு அப்பெண்ணின் தோள்பட்டை மேல் கை வைத்து, இடுப்பின் மீது கைகளை மடக்கி வைத்து இப்படித்தான் நடனமாட வேண்டும் என சொல்லி மிகவும் அநாகரீகமாக நடந்து கொண்டதாகவும் .,வரும் ஏப்ரல் மாதம் மூன்று நாள் பயிலரங்கம் நடத்த போவதாகவும் ,அங்கு உங்களுக்கு எல்லாம் வகுப்பு எடுக்க வேண்டும் என கூறி ஆசிரியைகளை தரக்குறைவாகப் பேசியதாகவும் .. இது அவருக்கு மிகவும் வேதனை அளித்ததால் தற்கொலை செய்துகொள்ளலாம் என்று எண்ணியதாகவும் அந்த இசை ஆசிரியையை அளித்த புகாரில் குறிப்பிடப்பட்டுள்ளது.